
இந்திய கிரிக்கெட் அணியின் இன்றைய புகழுக்கு “ 1983 “ல் நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது ஓர் முக்கியமான காரணம். 1983ல் நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பையில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது முதல் ,வெற்றி பெற்றது வரையிலான சுவாரஸ்ய கதையை CCL யின் நிறுவனர் விஷ்ணு இந்தூரி மற்றும் Phantom Films மது மாடேனா ஆகியோர் பாலிவுட் படமாக இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தை பற்றி தயாரிப்பாளர்கள் விஷ்ணு இந்தூரி மற்றும் மது மாடேனா பேசும் போது “ இப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளோம்.. இப்படம் எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பாகும் ஏனென்றால் இக்கதையை போல் ஒரு உன்னதமான படைப்பை தயாரிக்கும் பொறுப்பு அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காது.”
இப்படத்தின் படபிடிப்பு வருகிற மார்ச் 2017 முதல் துவங்கவுள்ளது.