இதோ இன்னொரு மலபார் அழகி நேஹா ரத்னாகரன் !

neha11ஆறு, அருவி என முற்றிலும் நீர் வரப்பின் ஈரத்தில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களுடைய மலபார் பகுதியை சேர்ந்தவர் நேஹா ரத்னாகரன். இவர் VVR சினி மாஸ்க் தயாரிக்கும் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சின்னத்திரை புகழ் தீபக் நடிக்கும் இப்படத்தை  S.N. சக்திவேல்.இயக்குகிறார்.

நேஹா  பேசும் போது “ மாடல் , விளம்பர படம் என நடித்துக் கொண்டு இருந்தேன். எதையும் செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் எனக்கு அதிகம் உண்டு. அப்படியே சினிமாவிலும் நடித்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். கேரளத்து பெண்கள் நடித்தால் பிரபலமாவது தமிழில் தானே. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்  என்னை விட்டு விடுமா என்ன. இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்தில் ‘தீபிகா’ என்னும்  கதா பாத்திரத்தில் நடிக்கிறேன். நான் ஒரு துறுதுறு வாயாடி சென்னை பெண்ணாக வருகிறேன். ‘மிஸ் மலபார்’ போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிப்பதே என் குறிக்கோள்” என்று நம்பிக்கையோடு தனது முதல் பட அனுபவத்தை பற்றி ஆரம்பித்தார் நேஹா.

“ தீபக், நடிப்பில் சீனியராக இருந்தாலும், நான் முதல் படம் நடிக்கிறேன் என்று எனக்கு உதவி செய்தார். அனைவரிடமும் தன்மையாய் பழகக் கூடியவர். காமெடி படம் என்பதாலோ என்னவோ நான் சீரியசான காட்சிகள் நடித்தாலும் சுற்றி இருப்பவர்கள் சிரித்து கொண்டே இருப்பார்கள். எனினும் இயக்குநர் எனக்கு அனைத்து காட்சிகளையும் சரிவர செய்ய உதவினார்.”

படத்தின் தலைப்பு போல் ஏதேனும் தண்ணில கண்டம் அனுபவம் உண்டா என்று கேட்ட பொழுது விக்கலோடு தொடங்கினார் “ எனது ஊர் சுற்றிலும் தண்ணீர் மட்டுமே காணப்படும். தண்ணீரில் பயம் என்றெல்லாம் இல்லை. எனினும் ‘தண்ணியடித்து சரமாரியாக வண்டி ஓட்டுபவர்களை பார்த்தால், எங்கே நம்மை மோதி விடுவார்கள் என்று எனக்கு மிகவும் பயமாக இருக்கும்.“ என்றார்.

“இப்படம் கண்டிப்பாய் ரசிகர்களைக் கவரும். எனக்கு முதல் பட வாய்ப்பளித்து உறுதுணையாய் இருந்த  தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. படப்பதிவின் போது உதவியாய் அனைத்து கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்.” என்றார். ஆஹா அழகாகப்பேசுகிறாரே நேஹா.பிழைத்துக்கொள்வார்.