இனி தமிழ்ப் படங்களில்தான் கவனம் : அஜ்மல்

ajmal1திரு திரு  துரு  துரு ,அஞ்சாதே , கோ , உள்ளிட்ட  படங்களில் நடித்தவர் அஜ்மல் அமீர் . தமிழில்  நல்ல  வரவேற்பை பெற்ற  படங்களில்  நடித்து வந்தாலும்  தனக்கென  ஒரு இடத்தை தக்க  வைப்பதற்குள்  தெலுங்கு, மலையாளம்  என்று பிசியாகிவிட்டார் .

தெலுங்கில்  இரண்டு  படங்களில் நடித்தவருக்கு  அங்கேயும் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது , திரும்பவும் மலையாள படவுலகிற்கு போனவருக்கு மோகன் லாலுடன்  சேர்ந்து  ஒரு படத்தில் தமிழனாக  நடித்திருக்கிறார் .

இப்படி முன்று  மொழிகளிலும்  நடித்து  வருபவருக்கு தமிழ்  படங்களில் நடிக்கவே  அதிகம் ஆசைப்படுகிறாராம் . இதற்காகவே  மலையாளம் , தெலுங்கு படங்களுக்கு  கொஞ்ச  நாள் ஓய்வு  கொடுத்துவிட்டு  முழுக்க  முழுக்க தமிழ்  படத்தில்  கவனம்  செலுத்தபோகிறாராம் . அதற்காகவே  கேரளாவிலிருந்து சென்னைக்கு  குடி பெயர்ந்து வந்து விட்டாராம் .  நல்ல  கதையம்சம்  உள்ள  படங்களுக்காக  கதை  கேட்டு வருகிறார் .

இனி  தமிழில்  ஒரு நல்ல  இடத்தை  பெறும் வரை  தமிழ்  படங்களில்  மட்டும்  கவனம்  செலுத்தப்போகிறேன் என்றவர் இதற்காக  ஒரு இந்தி  பட வாய்ப்பை கூட வேண்டாம் என்று  மறுத்திருக்கிறார் .