இறுதிக்கட்ட பணிகளில் ‘வலியவன்’

valiyavan4ஜெய் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன்   “வலியவன்”.படத்தை இயக்குகிறார். SK ஸ்டியோஸ் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் “வலியவன்”.

பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் இயக்குகிறார் இயக்குநர் சரவணன்.

வலியவன் படத்தின் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்டிரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், “பண்ணையாரும் பத்மினியும்” பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தின் தலைப்புகேற்றவாறு தன்னை காண்பிக்கவும், படத்தின் கதாபாத்திறத்தின் தன்மைக்கு தேவைப்பட்டதற்காகவும் நடிகர் ஜெய் சுமார் 6 மாதங்களுக்கும் மேல் உடற்பயிற்சி மேற்கொண்டார். ஹாங்காங்கில் இருந்து ஒரு சிறப்பு உடற்பயிற்சியாளரை வரவழைத்து அவரின் வழிகாட்டுதலில் மிகவும் சிரமப்பட்டு உணவு பழக்கவழக்கங்களை மாற்றி அதன் மூலம் தன் உடலை மெருகேற்றி 6 பேக் வரவைத்துள்ளார் ஜெய்.

படமாக்கமும், அதன் வெளிப்பாடும் மிகவும் சிறப்பாக வந்ததை கண்டு மகிழ்ச்சியுற்ற நடிகர் ஜெய், வலியவன் படத்தின் ஒலிச் சேர்க்கையை (Dubbing) தொடர்ந்து 24 மணிநேரத்தில் முடித்துள்ளார்.

சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படத்தின் படபிடிப்புகள் நடை பெற்று தற்போது இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது போல, விரைவில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கும் வலியவன் படமும் கண்டிப்பாக கவரும்.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்:

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சரவணன்,தயாரிப்பு – SK STUDIOS

ஓளிப்பதிவு – B. தினேஷ் கிருஷ்ணன், இசை – டி.இமான், கலை – ராஜா மோகன், பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா. இறுதிக்கட்ட பணிகளில் ‘வலியவன்’.