இளையராஜாவுக்கு ஓவியர்கள் முதல் மரியாதை !

Ilayaraja_GDAஇந்தியாவில் முதன் முறையாக 100 ஓவியர்கள் இணை​
ந்து வரையும் நிகழ்ச்சி .இந்தியாவிலேயே முதன் முறையாக1000படங்களுக்குஇசையமைத்தஇசைஞானி இளையராஜாஅவர்களுக்கு மரியாதைசெலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இணை​ந்து வரையும் ஓவியர்கள் போட்டி வருகிற 12/03/16 அன்று சனிக்கிழமை காலை ​9.30​ மணி அளவில் லயோலா கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இசைஞானி  இளையராஜா அவர்களின்  simphony  இசையான   ” Nothing but wind ” எனப்படும் அவருடைய இசை கோர்ப்புகளை ஓவியர்கள் ஓவியங்களாக வரையுள்ளனர்  என்பது விழாவின் தனி சிறப்பு எனலாம்.விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் ​,​
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் , வரைகலை  கல்லூரி மாணவர்களான , இயக்குநர் கதிர் , இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.