‘இவனுக்கு தண்ணீல கண்டம்’படம் எல்லோரையும் மிதக்க வைக்கும் !

ivanukku-thalaila-kandam-1சின்ன திரை மூலம் எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த தீபக்  வெள்ளித் திரையிலும் ‘இவனுக்கு தண்ணீல கண்டம் ‘ படத்தின் மூலம் தனது முத்திரையை பதிக்க வருகிறார்.

‘பல தலைப்புகள் ஆலோசித்த பிறகே இந்த தலைப்பை தேர்வு செய்தோம்.அது இந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை நாங்கள் நினைக்கவே  இல்லை.

இந்த படம் உலக வெப்பமயம் ஆவதையோ , தண்ணீர் பிரச்சனை பற்றியோ பேசவில்லை. இது குடியின் தீமைகளை பற்றி விவாதிக்கும் பிரசார படமும் அல்ல. நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு பார்ட்டி, அதன் பின்னோடியில் இருக்கும் மது கேளிக்கைகள் , அதனால்  வரும் விளைவுகள் ஆகியவற்றை மிகவும் ஜனரஞ்சகமாக நகைச்சுவையோடு  சொல்லி இருக்கிறார் இயக்குநர்  சக்திவேல். இந்த நகைச்சுவை  ஒரு போதை போல, மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.

நடிப்பு என்று வந்த பிறகு  நான் பெரிய வேடமோ,சின்ன வேடமோ ….சின்ன திரையோ , பெரிய திரையோ என்பதைப் பற்றிக் கவலை படுவதே இல்லை. இந்த படத்தில் கூட நான் ஒரு சின்ன திரை தொகுப்பாளனாக  தான் நடிக்கிறேன்.அந்த பாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பதால் மட்டுமே நான் நாயகனாக தேர்வு செய்ய பட்டு உள்ளேன்.சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் முக்கிய காரணம் நாங்கள் அவர்கள் வீட்டு பிள்ளையாக கருதப் படுவதுதான். இந்த வரவேற்ப்பு படத்தின் வெற்றிக்கு உதவியாக இருக்கும்.