உதவி இயக்குநர்கள் படம் இயக்க உதவும் நடிகர் ஆரி!

aari1 ஆரிமுகம் என்ற நிறுவனம் மூலம் உதவி இயக்குநர்களுக்கு படம் இயக்கும் வாய்ப்பை வழங்க உள்ளார் நடிகர் ஆரி.

மாலைப்பொழுதின் மயக்கத்தில், நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ஆரி. தற்போது தனது அடுத்த பயணத்துக்கான திட்டமிடலில் ‘ஆரிமுகம்’ என்ற நிறுவனத்தை துவக்கி, அதன் கிரியேட்டிவ் ஹெட்டாக பொறுப்பேற்றுள்ளார்.

உதவி இயக்குநர்களுக்கு குறும்படம் இயக்குவதற்கான பயிற்சி அளித்து, அதன்மூலம் ஒரு படம் இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தர உள்ளார். அது குறித்து நடிகர் ஆரி பேசும்போது,

“தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சினிமா இயக்கும் கனவுகளோடு ஏராளமான இளைஞர்கள் சென்னைக்கு படையெடுக்கின்றனர். பல போராட்டங்களுக்குப் பிறகே அவர்களுக்கு ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி இரண்டு, மூன்று படங்களில் இயக்கத்தைக் கற்றுக்கொண்டு, தான் இயக்குநராவதற்காக பெரிய போராட்டமே வாழ்க்கையோடு நடத்த வேண்டி உள்ளது.

அப்படி போராடும் உதவி இயக்குநர்களுக்கு ஒரு படம் இயக்கும் வாய்ப்பை வழங்க உள்ளேன். அதற்காக ஆரிமுகம் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இந்த நிறுவனம் மூலம் நூறு ஆளுமைகளை சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளேன். அதில் சினிமாவின் அனைத்து துறையை சார்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக, தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளேன்.

aari23பெரும்பாலான உதவி இயக்குநர்கள் தங்கள் கதையை ஒரு பத்து நிமிட குறும்படமாக எடுக்க பெரும் சிரமப்படுகின்றனர். அந்த பத்து அல்லது முப்பது நிமிட குறும்படத்தை எடுப்பதற்கான செலவையும் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கும் எனது ஆரிமுகம் நிறுவனம் உதவும். மேலும், உதவி இயக்குநராக சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ள 1700 பேர் மட்டுமே இந்த நிறுவனத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

இந்த 1700 பேரிலிருந்து ஒருவருக்கு முதலில் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு ஏற்படுத்த உள்ளோம். அதற்காக பல்வேறு கட்டங்களில் தரம் பிரிப்போம். தேர்வாகும் உதவி இயக்குநர், படம் இயக்கும் வாய்ப்பை பெறுவார். மேலும், உதவி இயக்குநர்களுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகள் பயிற்சி அளிக்க உள்ளனர். என்னுடைய இந்த ஆரிமுகம் நிறுவனத்தோடு வாவ் செலிபிரேஷன் முகமது இப்ராஹிம் மற்றும் மாஸ் மீடியா ஷாநாவாஸ் கை கோர்த்துக்கொண்டு செயல்பட உள்ளனர். விரைவில் மற்ற விவரங்களை செய்தியாளர் சந்திப்பின்போது அறிவிப்பேன்”

இவ்வாறு நடிகர் ஆரி கூறினார்.