‘உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்’ நூல் வெளியீடு!

world-cinema-bookசென்னை புத்தகக் காட்சியில் நூல் வெளியிடும் நிகழ்வுகள் பெருமளவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் எழுதிய 6 நூல்களை எதிர் வெளியீடு வெளியிட்டிருக்கிறது. தினந்தோறும் புத்தகக் காட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு நூல் என்று எதிர் வெளியீடு ஸ்டாலில் அந்த நூல்களை வெளியிடும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. தினந்தோறும் மாலை 7.00 மணியளவில் நடக்கும் இந்த நிகழ்வுக்கு எழுத்தாளப் பெருமக்களும், சிந்தனையாளர்களும், பத்திரிகையாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்அண்மையில் புத்தககக் காட்சியில் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் எழுதிய’ உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்’ என்கிற நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடந்தது இதில் கலந்து கொண்டு முதல் பிரதியை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார் மீகாமன் திரைப்பட இயக்குநர்,  மகிழ் திருமேனி. முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு  வாழ்த்திப் பேசினார் வேலையில்லாப் பட்டதாரி திரைப்பட இயக்குநர், வேல்ராஜ் . மேலும்  குற்றம் கடிதல் திரைப்பட இயக்குநர், பிரம்மா, சூது கவ்வும் திரைப்பட கதை வசனகர்த்தா ஸ்ரீநிவாசன் கவிநயம், மற்றும் திரையுலக ஆளுமைகள்,  பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.  வாசகர்கள் மத்தியில் இந்த நிகழ்வு சிறப்பாகப் பேசப்படுகிறது.

‘உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்’ பற்றி ஒரு சிறு அறிமுகம்:
தமிழ் திரைப்பட விமர்சனங்களில் கௌதம சித்தார்த்தன் ஒரு புதிய பாணியைக் கையாள்கிறார். மேலோட்டமாக இந்த நடிகர் இந்த இடத்தில் இப்படி நன்றாக நடித்திருக்கிறார்.வசனங்கள் நன்றாக இருக்கின்றன என்பது போன்ற விமர்சன வகை அல்ல இது. திரைப்படத்திற்குப் பின்னாலுள்ள அரசியலை நுட்பங்களை மாற்றுப் பார்வையை முன்வைக்கிறது இந்நூல். நமது தமிழ் படங்களை எடுத்துக் கொண்டு சர்வதேச அளவில் வெளியாகின்ற படங்களின் அரசியலோடு, பண்பாட்டோடு, தொழில் நுட்பங்களோடு, மாற்றுப் பார்வைகளோடு பொருத்தி தமிழ்த் திரை மொழியை உலக அளவிற்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.