எம்.எஸ்.விக்கு இளையராஜா இசை அஞ்சலி 27-ஆம் தேதி நடக்கிறது !

ilayaraja05மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததை ஒட்டி அவரது பாடல்களை க்கொண்ட இசைவிழாவை இசைஞானி இளையராஜா அவர்கள் வரும் 27-ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சி பற்றி இளையரஜா கூறும்போது,

”திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில் சிறு இசைக்குழுவினரோடு நான் வாசித்து காட்ட இருக்கிறேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வ சாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் என்பதை நான் மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம்மை உயிரை  எங்கோ அழைத்துசெல்லுகின்ற உணர்வை கொண்டுவருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்.” என்றார் இளையராஜா.

என்னு:ள்ளே எம்.எஸ்.வி. என்ற் இந்த இசைநிகழ்ச்சி ஜீவா – இளையராஜா கல்வி அறக்கட்டளை சார்பாக ந்டத்தப்படுகிறது.