எல்லாப் புஸ்பாக்களுக்கும் நான்தான் புருஷன் : சினிமா விழாவில் சூரி ஆபாசப் பேச்சு

IMG_0237சமீப காலமாக காமெடியன் சூரி  சினிமா விழா மேடை கிடைத்தால் போதும் அறுத்துத் தள்ளிவிடுவார். படப்பிடிப்பில் நடந்த கலாட்டாக்கள் என்கிற பெயரில் அங்கே நடந்த கூத்துகளைப்பற்றி அளந்து விடுவார்.

பத்திரிகையாளர்கள் சூரி பேச ஆரம்பித்தாலே பீதியாகி விடுவார்கள். சூரியின் பேச்சில் காமெடி என்கிற பெயரில் பெரும்பாலும் காம நெடிநான் அடிக்கும்.

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் எழில் மாறன் புரோடெக்ஷன்ஸ் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ‘திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  நேற்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷ்ணு விஷால் , நாயகி நிக்கி கல்ராணி , இயக்குநர் எழில் மாறன் ,நடிகர் சூரி , ரவி மரியா , இசையமைப்பாளர் C..சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.எல்லாரும் அடக்கியே வாசித்தனர்.ஆனால் விழாவில் நடிகர் சூரி பேசியது ஆபாசத்தின் உச்சம் எனலாம்.

சூரி பேசும் போது ” படத்தில் என் பாத்திரத்தின் பெயர்’ புஷ்பா புருஷன்’ .இந்தப் படம் வந்துவிட்டால்  புஸ்பா என்று யாரெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் என் பெயர்தான் முதலில் ஞாபகம்தான் வரும். இனி புஸ்பாக்கள் தன் புருஷனை நினைத்துக் கொள்கிறார்களோ இல்லையோ என்னை நினைத்துக் கொள்வார்கள். வீட்டுக்காரர்  ‘ஏம்மா புஸ்பா ‘என்றால்  அவர்களுக்கு வீட்டுக்காரர் ஞாபகம் வராது.  என் நினைப்புதான் வரும். சூரிதான்  என் புருஷன் என்கிற மாதிரி இருக்கும்.” என்று அவர்  தமாஷாக நினைத்துப் பேசிக்கொண்டே போனது மேடை நாகரிகத்தைக் கேலிக் கூத்தாக்கிய ஆபாசப்பேச்சு. இதைக்கேட்ட பத்திரிக்கையாளர்களும்  பெண் பார்வையாளர்களும் அதிர்ச்சியானார்கள். அருவருப்பில் நெளிந்தார்கள்.