ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் ‘திட்டம் இரண்டு’

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் ‘திட்டம் இரண்டு’ திரைப்படம்..!
சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘திட்டம் இரண்டு’.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். எந்தக் கேரக்டரில் நடித்தாலும், அந்தக் கேரக்டருக்கான நியாயத்தைத் திறம்பட செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் பலம் சேர்க்கும் ரோலில் நடிக்கும் மூன்றாவது படம் இது.

தனித்துவமிக்க இப்படத்தின் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பான டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது.

‘மான்ஸ்டர்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மாஃபியா’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவில் தனது தனித் திறமையைக் காட்டி இருந்த ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் இந்தப் படத்தின் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார்.

இது போன்ற மிஸ்ட்ரி திரில்லர் படங்களுக்கு இசை மிக முக்கியம். அதைப் பூர்த்தி செய்ய இருக்கிறார் இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன்.

‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’, ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய படங்களின் படத் தொகுப்பாளர் C.S.பிரேம் குமார் இந்தப் படத்திற்கும் படத் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.

‘மரகத நாணயம்’, ‘சிக்ஸர்’ ஆகிய படங்களில் பணியாற்றிய ராகுல் கலை இயக்குநராக இந்தப் படத்திலும் பணியாற்றுகிறார்.

‘ஒரு படைப்பின் வடிவத்தைவிட அது தரும் உணர்வு பெரியது’ என்று சொல்வார்கள். அந்த வகையில் ‘யுவர்ஸ் சேம்ஃபுல்லி’ என்ற குறும்படத்தின் மூலம் பெரிதாக கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநரான விக்னேஷ் கார்த்திக் இந்தப் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

மக்களுக்கு மிகவும் பிடித்த ஜானரான மிஸ்ட்ரி திரில்லர் கதையைச் சார்ந்த இப்படம், எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாக உருவாகி வருகிறது.

ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரில்லர் மற்றும் இன்ட்ரஸ்டிங் அனுபவத்தைக் கொடுக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முதல் ஷெட்யூல் முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்தக் கொரோனா லாக் டவுன் முடிந்ததும் துவங்க இருக்கிறது.