கண்ணதாசன்-எம்.எஸ்.விஸ்வநாதன் விழா!

16 ஆம் ஆண்டுகவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விழா, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் ப. லெட்சுமணன் தலைமை தாங்கினார். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் வரவேற்புரையாற்றினார்.

கவியரசர் மெல்லிசை மன்னர் விருதுகளை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எம்.முரளி, திரு: கணேஷ் கிருபா ஆகியோர் பெற்றனர்.

திரு.. தமிழருவி மணியன் கண்ணதாசன் காண விரும்பிய சமுதாயம் என்ற பொருளில் சொற்பொழிவாற்றினார் முன்னதாக செயலாளர் காந்தி கண்ணதாசன் அறிமுக உரையாற்றினார். கவிஞர் காவேரிமைந்தன் நன்றியுரையாற்றினார்.