‘கள்ளன்’ படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது!

kallan-cpஇயக்குநர் கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ படப்பிடிப்பு, கேரள மாநிலம் கொச்சினில் தொடங்கியது. தயாரிப்பாளர் வி.மதியழகன் கேமராவை முடுக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

 

இயக்குநர் அமீரின் உதவியாளர் சந்திரா இயக்கும் இப்படத்தில் புது டில்லியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் நிகிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

 

கரு.பழனியப்பன்,நிகிதா,நமோ நாராயணன், சௌந்தர்ராஜா ஆகியோர் நடிக்கும் ‘கள்ளன்’ படத்தை  எக்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் தயாரிக்கிறார்கள்.

 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சினைத் தொடர்ந்து தேனி, போடிமெட்டு பகுதிகளில் நாற்பத்து ஐந்து நாட்கள் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.kallan1