குச்சுபுடி  கலைஞர் ஷைலஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது : தமிழக ஆளுநர் வழங்கினார்!

குச்சுபுடி நடனக்கலைஞர்  செல்வி  ஷைலஜாவுக்கு பாரதீய வித்யா பவனின்  வாழ்நாள் சாதனையாளர் விருது : தமிழக ஆளுநர் வழங்கினார்!

 பாரதீய வித்யா பவனின் கலாச்சாரத் திருவிழா தொடங்கியது. நேற்று  மாலை நடைபெற்ற  அதற்கான நிகழ்வில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பாரத வித்யா பவன் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கலைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்பட்டன.தமிழக ஆளுநர் விருதுகளை வழங்கினார். 

விழாவில் குச்சிப் புடி கலைஞர் செல்வி ஷைலஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது  வழங்கப்பட்டது. 

குச்சுபுடி நாட்டியக் கலைஞர் கலைமாமணி செல்வி  சைலஜா அவர்களுக்கு, குச்சுபுடி நாட்டியத்துறையில் அவரது நாற்பதுஆண்டு கால அர்ப்பணிப்புடன் கூடிய சேவையைப் பாராட்டி, பாரதீய வித்யா பவன் இந்த ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’  அளித்துக்கௌரவித்திருக்கிறது. 

பாரம்பரிய கலைவடிவங்களை பேணிக்காத்து, அதனை வளர்த்தெடுப்பதையே தன்னுடைய  ய தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் பாரதீய வித்யா பவன், இயல், இசை மற்றும் நாடகக் கலையில் சிறந்த முறையில் சேவையாற்றி வரும்திறமையான கலைஞர்களை அவர்களின் அனுபவம், தகுதி அடிப்படையில் தேர்வு செய்து, அவர்களுக்கானஅங்கீகாரத்தையும், அடையாளத்தையும் விருதுகளால் அலங்கரித்து, அடுத்த தலைமுறையினரும் ஆர்வம் கொள்ளும்வகையில் கௌரவித்து வருகிறது.  

இந்த வரிசையில் குச்சுபுடி என்ற இந்திய பாரம்பரிய நாட்டியத்துறையில்தனித்துவத்துடனும், கலையார்வத்துடனும் குச்சுபுடி மீதான தீராப் பற்றுடனும் கடந்த நாற்பது ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன்பணியாற்றி வரும் செல்வி  ஷைலஜாவிற்கு, அவரது  கலைப்பணியைப் பாராட்டி, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’வழங்கியிருக்கிறது.

பாரதீய வித்யா பவன் வழங்கும் இந்த விருதைப் பெறும் முதல் குச்சுபுடி கலைஞர் இவர் என்பதால் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அவரிடம் இந்தவிருது குறித்து பேசும் போது,

‘‘ இது வரை குச்சுபுடி மற்றும் பரதநாட்டியத்திற்காக நான் எத்தனையோ விருதுகளைப் பெற்றிருந்தாலும், வாழ்நாள்சாதனையாளர் என்ற விருதினைப் பெறும் போது, நான் போற்றும் இந்த குச்சுபுடி கலை என்னை மிக உயரத்திற்கு அழைத்துச் சென்றிருப்பதாகவே நினைக்கிறேன். பாரதீய வித்யா பவன், கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்துறையில் தனித்தன்மையுடன் இயங்கி வருவதை அனைவரும் நன்குஅறிவார்கள். அவர்கள் வழங்கும் விருது, ஒவ்வொரு கலைஞர்களையும் மேலும் உற்சாகப்படுத்தும். குச்சுபுடி என்ற நாட்டிய வடிவத்தை அதன்பாரம்பரியத்தன்மையைக் கெடாமல் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கும் கற்பிக்கவேண்டும் என்ற ஊக்கத்தையும் அளிக்கிறது.
 
இந்தியாவின் கலை மற்றும் கலாச்சார அடையாளங்களாகப் போற்றப்படும் பரதநாட்டியம், கதக், ஒடிஸி, மோஹினியாட்டம் என எட்டிற்கும் மேற்பட்ட நடனவடிவங்களில், நாட்டிய நாடகப் பாணியில் ஒப்பற்றுத் திகழும் குச்சுபுடிக்கும் ஓரிடம் அளித்து, மறைந்து கொண்டு வரும் இந்த கலையை எம்முடைய குருவேம்பட்டி பாணியிலேயே இந்த இளந்தலைமுறையினருக்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் கற்பிக்கும் எண்ணத்தை இந்த விருதால் பெற்றிருக்கிறேன்.’என்றார்.

 பாரதீய வித்யா பவன் அளித்திருக்கும் இந்த ‘வாழ்நாள் சாதனையாளர் ’என்ற விருது, குச்சுபுடி கலைஞர் ஷைலஜாவிற்கு மட்டும் கிடைத்ததல்ல, அவர்உருவாக்கியிருக்கும் அறுபதிற்கும் மேற்பட்ட குச்சுபுடி கலைஞர்களுக்கும், இந்த கலையை ஆர்வமுடன் கற்று வரும் அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்தஅங்கீகாரம் என்றே சொல்லலாம்.

இவ்விழாவில்  குச்சிப் புடி கலைஞர் செல்வி ஷைலஜாவுடன் கலைத்துறையில் சாதனை புரிந்த சாக்ஸ் போன் கலைஞர் கத்ரி கோபால் நாத் , கர்நாடக இசைக் கலைஞர் ஓ.எஸ்.அருண்   ஆகியோரும்  பாரத வித்யா பவன் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றனர்.