கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் முன்னெடுப்பில் பெங்களூரில் உள்ள IFA நிறுவனம் குறும்படங்களை தயாரிக்க முன் வந்தது. அதற்காக இயக்குநர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு குறும்படங்கள் எடுக்கப்பட்டன .அவை கேன்ஸ் திரைப்பட விழாப் போட்டிக்கு செல்கின்றன. இது பற்றி இயக்குநர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்புடையீர், வணக்கம்.
பெங்களூருவில் உள்ள IFA நிறுவனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துடன் இணைந்து குறும்படங்களை தயாரிக்க முன்வந்தது. இதில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தை சேர்ந்த 25 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, 25 குறும்படங்கள் தயாரிப்பு செய்யப்பட்டது. 25 குறும்படங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை கொண்டு IFA நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த படங்கள் கடந்த வருடம் பெங்களூருவில் நடந்த உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அதில் திரு.சுப்ரமணிய பாரதி அவர்கள் இயக்கிய ”பாஞ்சாலி” என்ற திரைப்படம் முதல் பரிசை வென்றது.
இந்த 25 திரைப்படங்களில் 15 திரைப்படங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டது,

திரு.ராஜாசெல்லமுத்து அவர்கள் இயக்கிய ”தொப்புள் கொடி”
திரு.ஸ்ரீராம் அவர்கள் இயக்கிய ”சாயுபும் நானும்”
திரு.சுவாமி ராஜலிங்கம் அவர்கள் இயக்கிய ”தண்டனை”
திரு.ஏ.வி.கிரி அவர்கள் இயக்கிய ”மரப்பாச்சி பொம்மைகள்”
திரு.அசோக் பாண்டியன் அவர்கள் இயக்கிய “ஸ்டார்ட் கேமிரா ஆக்‌ஷன்”
திரு.வீரசிங்கம் அவர்கள் இயக்கிய “பால்நிலா பயணம்”
திரு.கங்கையின் செல்வன் அவர்கள் இயக்கிய “ஆன்மாவின் ஆயுதம்”
திரு.கல்யாணசுந்தரம் பால்சாமி அவர்கள் இயக்கிய ”கொடுப்பினை”
திரு.பூமிநாதன் அவர்கள் இயக்கிய “சான்றோன்”
திரு.ரமேஷ் அவர்கள் இயக்கிய “அம்மாவின் கதைகள்”
திரு.அன்பரசன் அவர்கள் இயக்கிய “லைஃப் ஆப் மூக்கன்”
திரு.பாக்யராஜ் பரசுராமன் அவர்கள் இயக்கிய “செங்கொடி”
திரு.சுப்ரமணியபாரதி அவர்கள் இயக்கிய “பாஞ்சாலி”
திரு.வெற்றிவேலன் அவர்கள் இயக்கிய “சரணாலயம்”
திரு.ஜெயராஜ் அவர்கள் இயக்கிய “கருணை”
ஆகிய 15 திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த வருடம் மே மாதம் பிரான்ஸ் நாட்டில் நடக்க இருக்கின்ற உலக திரைப்பட விழாவிற்கு போட்டிக்காக அனுப்பப்பட்டது. இதில் 5 குறும்படங்கள் கேன்ஸ் பட விழா தேர்வுக்குழுவினரால் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

திரு.ஸ்ரீ ராம் அவர்கள் இயக்கிய ”சாயுபும் நானும்”

திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் இயக்கிய ”கொடுப்பினை”

திரு.பூமிநாதன் அவர்கள் இயக்கிய “சான்றோன்”

திரு.பாக்யராஜ் பரசுராமன் அவர்கள் இயக்கிய ”செங்கொடி”

திரு.வெற்றிவேலன் அவர்கள் இயக்கிய “சரணாலயம்”

ஆகிய 5 திரைப்படங்கள் கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் போட்டிக்காக திரையிட ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பிரான்ஸ் நாட்டில் நடக்க இருக்கின்ற கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களின் படங்கள் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோன்று, இதற்கு காரணமாக IFA நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் திரு.சரவணபிரசாத் அவர்களுக்கும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆர்கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு