சினிமா விழாக்களுக்கு பிரபலங்கள் யாரும் வருவதில்லை: நடிகர் ஸ்ரீகாந்த் ஆதங்கம்

img_0667‘சாயா’.படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார் .தயாரிப்பாளர் சங்கம் (கில்டு)செயலாளர் ஜாக்குவார் தங்கம் ,நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

அ ம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை. திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் தான் இந்த ‘சாயா’.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர்.

img_0707 விழாவில் பாடல்களை வெளியிட்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது

”எனக்கு சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும். இதுமாதிரி விழாக்களுக்கு அழைக்கும் போது பிரபலங்கள் யாரும் வர முன்வருவதில்லை. சாக்கு போக்கு சொல்லி பொய்யான காரணம் சொல்லி தவிர்ப்பார்கள், வரமாட்டார்கள். இதை எண்ணி வேதனை அடைந்து இருக்கிறேன். இதை நான் அனுபவத்திலும் கண்டு இருக்கிறேன்.

விழா நடத்துபவர்கள் பலரது  தவிப்பையும் உணர்ந்து இருக்கிறேன்.அதன் வலிகளைப் புரிந்து பிறகு நான் ஒரு முடிவு செய்தேன். என்னை அழைப்பவர்களின் விழாவுக்குச் சென்று அவர்களை வாழ்த்துவது என்று முடிவு செய்தேன்.

நான் சம்பந்தப் படாத விழாவாக இருந்தாலும் சென்று வாழ்த்தி வருகிறேன். ஊக்கப்படுத்துகிறேன் .அப்படித்தான் இங்கே வந்திருக்கிறேன்.சினிமாவில் எல்லாரும் இப்படி ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி ஒற்றுமையாக இருக்கவேண்டும். இப்படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

img_0765நடிகை வசுந்தரா பேசும்போது,

“நம் நாட்டில் கல்வி பற்றிய விழிப்புணர்வு இன்னும் வளர வேண்டும்.
உலகில் கல்வியில் முன்னேறிய முதல் பத்து நாடுகளில் நம் நாடு இல்லை.
நம் நாட்டில் கல்வியால் முன்னேறியவர்கள் பலர் இருக்கிறார்கள். படிப்பால் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்த உதாரணம் அப்துல் கலாம் அவர்கள்.
இப்படம் கல்வி, குழந்தைகள் பற்றிப் பேசுவதால் இதைச் சொல்கிறேன்.
படக் குழுவுக்கு வாழ்த்துக்கள் ”  என்றார்.

முன்னதாக அனைவரையும் வரவேற்ற   ‘சாயா’  பட இயக்குநர் வி.எஸ். பழனிவேல்  படம் பற்றிப் பேசும் போது ,

”எனக்கு சொந்த ஊர் திருச்சி மாவட்டம் ஒரு சிறிய கிராமம். நான் சிறுவயதிலேயே கலையார்வம் கொண்டு 13 வயதிலேயே நாடகம் போட்டவன். படிப்படியாக வளர்ந்து சென்னை வந்து கல்லூரி சினிமா என கற்றுக் கொண்டு இப்போது இயக்கியதுடன் இந்த ‘சாயா’ படத்தை தயாரித்தும் இருக்கிறேன்.

இது என்ன மாதிரியான படம்?

பொதுவாக ஆத்மாசம்பந்தப்பட்ட கதை என்றால்அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால்முதன்முறையாகபெற்றோர்களும், குழந்தைகளும்அவசியம் பார்க்க வேண்டிய ஒருபடமாக ஆத்மாவை மையமாகவைத்து உருவாகியுள்ளது’சாயா’.

இந்தப்படம் கல்வியின்அவசியத்தை உணர்த்தும்வகையில் தனியார் பள்ளிகளின் தவறுகள் பற்றிச்சொல்லும் வகையிலும் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. எனவேகுழந்தைகள் ஒருமுறையாவதுஇந்த படத்தைப் பார்த்தால்அவர்களுக்கு கல்வியின்அவசியம் புரியும்.

ஆத்மா என்பது எப்படிப்பட்டது?ஒரு மனிதன் இறந்தபின் அவன்ஆத்மா அவனது உடலைப்பார்க்க முடியுமா? பார்த்தால்என்ன செய்யும்? இந்தகேள்விகளுக்கெல்லாம் ”சாயா”படம் பதிலளிக்கும் ” என்றார் .

இவ்விழாவில் இயக்குநர்கள் மனோஜ் குமார், கே.எஸ்.அதியமான், தாமிரா,
இசையமைப்பாளர் ஏ.சி. ஜான் பீட்டர் , படத்தின் நாயகன் சந்தோஷ் கண்ணா,நடிகர்கள் கராத்தேராஜா, ‘பாய்ஸ்’ராஜன், சின்ராஜ் ,நடிகைகள் நமீதா,  வசுந்தரா ,பட த்தின் நாயகி காயத்ரி,  தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) செயலாளர்  ஜாக்குவார் தங்கம்  ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

நிறைவாக தயாரிப்பாளர் சசிகலா பழனிவேல் நன்றி கூறினார்.