சுயாதீன பட முயற்சியில் கார்த்திக் சுப்பராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பின் கீழ் தயாரிக்கப்பட்ட மேயாத மான் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மற்றொரு படத்தையும் தயாரித்துள்ளார்.

இப்போது கார்த்திக் சுப்பராஜ் சுயாதீன ’இண்டிபெண்டண்ட்’ படங்களைத் தயாரிப்பதற்கான தனது அடுத்த முயற்சியை அறிவித்துள்ளார், மேலும் அவரது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் ’இண்டி’பெண்டண்ட் திரைப்படத்திற்கு ’அல்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இருமொழியாக உருவாக்கப்பட்ட அல்லி படத்தின் மூலமாக மலையாள நடிகர்களான ஜோஜு ஜார்ஜ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள், இந்த மாதம் இப்படம் வெளியாகிறது.

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஜோஜு ஜார்ஜ் தயாரிப்பில் மிகவும் பிரபலமான இயக்குநர் சணல்குமார் சசிதரன் இயக்கியுள்ள இந்த படம், மலையாளத்தில் சோழன் என்ற தலைப்பில் நேற்று வெளியிடப்பட்டது மற்றும் பல திரைப்பட விழாக்களில் இப்படம் சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. தற்செயலாக, தனுஷுடன் கார்த்திக் சுப்பராஜின் படத்திலும் ஜோஜூ ஜார்ஜ் நடிக்கிறார்.இப்படத்தின் ஊடக சந்திப்பு நேற்று நடந்தது.