சென்னையில் ஒரு பகுதியை தத்தெடுத்த சுஹாசினி, மணிரத்னம்!

naamஇயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் அவர்களின் ‘நாம்’ தொண்டு நிறுவனத்தின் சார்பாக சென்னை கோட்டூர், கோட்டூர் புரத்தில் உள்ள சூர்யா நகரைத் தத்தெடுத்துள்ளனர்.இப்பகுதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பின்னால் உள்ளது. தமிழக அரசு வேண்டிய நிவாரண உதவிகளைச் செய்து வரும் இந்நிலையில் நாம் இயக்கம் அரசுக்கு தோள் கொடுத்து உதவும் வகையில் இப்பணியைச் செய்து வருகிறது.
சூர்யா நகரை தத்தெடுத்த பின் முதல்கட்டமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினர் இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் தலைமையிலான நாம் குழுவினர். மேலும் மருத்துவ உதவிகள், கலந்தாய்வுகள் உட்பட பல உதவிகளை தொடர்ந்து செய்யவுள்ளனர் இதை அடுத்து ஊரப்பாக்கம் பகுதிக்கும் உதவ உள்ளனர்.
மணிரத்னம் எப்போதுமே அதிகம் பேசாதவர்; செயலில் மட்டுமே காட்டுபவர்.