ஜனவரி 5 முதல் “சாவி”

எதார்த்த சினிமா வரிசையில் தமிழில் வரும் “சாவி” திரைப்படம், பழகிய திசையில் பயணிக்கும் கதைக்கு புதிய திசைகளைத் திறக்கிறது.
 
ராசுமதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் படங்களில் அறிமுகமான பிரகாஷ் சந்திரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
 
அறம் படத்தில் தனது நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்ந்த சுனுலெட்சுமி துறுதுறுவென விழிகளுடன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
 
மதுரையில் வாழும் இளைஞன் ஒருவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களே சாவி படத்தின் கதை. சாவி உங்களின் இதயங்களையும் திறக்கக்கூடும். “சாவி” திரைப்படத்தின் இயக்குநர்   இரா.சுப்பிரமணியன். 
 
ஜனவரி 5ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.