ஜல்லிக்கட்டு தொடர வேண்டும்: கமல் பேச்சு

jalli-kml-rsசென்னையில் இன்று ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சி கிரின்வேஸ் சாலையில் உள்ள ஒரு அரங்கத்தில் நடந்தது.

புகைப்பட நிபுணர் சுரேஷ் நடத்திய இந்த கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

“”ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது மகிழ்ச்சி. இதில், இடம் பெற்றுள்ள காட்சிகள் இந்த விளையாட்டின் பெருமையை விளக்குவதாக உள்ளன. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டு. நமது பாரம்பரியத்தின் தொடர்ச்சி. தமிழர்களின் அடையாளம்.

வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டுகளில் மிருகங்கள் துன்புறுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டு விளையாட்டில் மிருகங்களை யாரும் துன்புறுத்துவது இல்லை. வீரத்தை நிரூபிக்கும் விளையாட்டாகவே தமிழகத்தில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. எனவே, ஆண்டு தோறும் தமிழர் திருநாளில் இது நடத்தப்பட வேண்டும். தை மாதம் நெருங்கி வருகிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற வேண்டும். அது தொடர வேண்டும்.””

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.