‘ஜோக்கர்’ மாதிரி படம் தயாரிக்க, தயாரிப்பாளருக்கு ஒரு துணிச்சல் வேண்டும்: வெற்றிமாறன்

joker1‘குக்கூ’ எனும் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர்
ராஜூமுருகன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘ஜோக்கர்’.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும்
எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று  சென்னையில் நடைபெற்றது.

குருசோமசுந்தரம்,காயத்ரிகிருஷ்ணா,ரம்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
யுகபாரதி எழுதியுள்ள பாடல்களுக்கு
ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்தில் பாடிய பாடகர்களை எல்லாம்
அறிமுகப்படுத்திவிட்டு பேசத் தொடங்கினார். அவர் பேசும் போது;
இந்தப்படத்தின் பாடல்கள் வெற்றி பெறுவதற்கு கவிஞர் யுகபாரதியின்
பாடல்வரிகள் தான் முக்கிய காரணம். சினிமாவை மிகவும் விரும்பி தயாரிக்கக்
கூடிய தயாரிப்பாளர்களில் ட்ரீம் வாரியர்ஸ் பிரபு சாரும் ஒருவர்.
இந்தப்படம் நிலையானதொரு வெற்றியைப் பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.

தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியதாவது; ‘சகுனி’படத்தைத் தொடர்ந்து நாங்கள்
தயாரிக்கும் படம் ‘ஜோக்கர்’.

அந்தக் கதையை படித்த பிறகு கண்டிப்பாக நான் இதைச் செய்ய வேண்டும் எனத்
தோன்றியது. படத்தின் ஒளிப்பதிவிற்காக
நாங்கள் செழியன் சாரைத் தொடர்பு கொண்ட போது,மிக மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார்.

இயக்குநர் ராஜூமுருகன், குரு சோமசுந்தரத்தினை முதலில் வேறு கதாபாத்திரத்திற்குத் தான் முடிவு
செய்து வைத்திருந்தார். ஆனால் அவருடன் தொடர்ந்து பணியாற்றும் போது தான்
அவருடைய திறமையைத் தெரிந்து கொண்டு படத்தின் முக்கிய கதாபாத்திரத்தினை
அவருக்குக் கொடுத்தார்.  அனைவருக்கும் இது ஒரு வெற்றிப்படமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.

பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி பேசியதாவது ;
‘என்னங்க சார் உங்க சட்டம்’ மாதிரியான பாடல் எழுத 15வருடங்கள்
காத்திருந்தேன். ஷான் ரோல்டனின் இசைக்கு மட்டுமல்ல,பாடல் வரிகளுக்கும்
நான் மிகப்பெரிய ரசிகன். ‘சூது கவ்வும்’ படத்தில் வரும் ‘எல்லாம் கடந்து
போகுமடா’

பாடல் வரிகளில் என்னை பிரமிக்க வைத்தவர் அவர்.
ஒரு திரைப்படம் உருவாக பணம் மட்டுமே போதாது. தைரியம் அதை விட முக்கியம்.
அந்த வரிசையில் ‘ஜோக்கர்’ குறிப்பிடத்தக்க ஒரு படம்.

joker-pmநடிகர் குரு சோமசுந்தரம் பேசியதாவது.
‘ஜோக்கர்’ படத்தில் ஏற்கனவே ‘என்னங்க சார் உங்க சட்டம்’பாடல் வெளியாகி
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று இந்தப் படத்தின்
அநைத்துப் பாடல்களும் வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் யுகபாரதியின்
வரிகளில்,ஷான் ரோல்டனின் இசையில் வந்துள்ள பாடல்கள் உங்கள் அனைவருக்கும்
பிடிக்கும். நிச்சயமாக இந்தப் பாடல்கள் வெற்றிபெறும். என்னிடம் சில பேர்
கேட்டார்கள்,’

என்ன சார் முதல் படம் ஹீரோவா பண்றீங்க,அதுவும் அரசியல் படமா?’ என்று. இது
வெறும் அரசியல் பற்றிய படம் மட்டுமல்ல. சினிமா என்பது இயக்குநர்களின்
மீடியம். அவ்ர்கள் நிச்சயமாக நல்ல படங்களைத் தான் தருவார்கள். இந்தப்
படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு ‘அல்வா’ சாப்பிடுவது போல
அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் இயக்குநரிடமும், ஒளிப்பதிவாளரிடமும்
இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இருவரும் வெளிப்புறப் படப்பிடிப்பு
நேரங்களில்,மக்கள் கூட்டங்களுக்கிடையே மிகவும் பொறுமையாக மக்களை
அனுசரித்து படப்பிடிப்பினை நடத்தினார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

நடிகை காயத்ரி கிருஷ்ணா பேசும் போது; ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்னுடைய
முதல் படம்.
நான் இந்தப் படத்தில் இசை என்கிற கதாபத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப்
படத்தில் நடிக்கும் போது முரா அய்யா விடம் இருந்து நிறைய விஷயங்கள்
கற்றுக் கொண்டேன்.

‘ஜோக்கர்’ படத்தின் பாடல்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது ; ஷான் ரோல்டன் மற்றும்
பிரதீப் ஆகிய இருவர் தான் என்னுடைய குரு.
உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஷான் ரோல்டனும் ஒருவர். ஜோக்கர்
படத்தில் அப்படி ஒரு அற்புதமான இசையை வெளிப்படுத்தியுள்ளார். சரியான
விதத்தில் கண்டறியப்பட்டால் ஷான் ரோல்டன் உலகின் தலைசிறந்த,
கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக நிச்சயமாக இருப்பார். இவ்வாறு
அவர் பேசினார்.

​இயக்குநர் ராஜுமுருகன் பேசும்போது ; படத்தின் தயாரிப்பாளர்கள்,படம் உருவாகிக் கொண்டிருக்கும்போது எந்தவித இடையூறும் செய்யாமல்,                                                                             என்னுடைய வேலையை என்னைச் செய்யவிட்டார்கள். இந்தப் படம் ‘Block Buster’ பட வரிசையில் இருக்குமா என்று எனக்குத் தெரியாது.
தமிழகத்தில் இருக்கும்  மக்களில் படிப்பறிவு இல்லாத 6கோடி  மக்களைக் குறி வைத்துத்தான் சமூகத்தின் ஆதிக்கசக்தியாக இருக்கும் அரசியல்வாதிகள்,
பெரு வர்த்தக முதலாளிகள், திரையுலகினர் ஆகியோர் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.​

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது ; ‘ஜோக்கர்’ மாதிரியான கதைக்களம் உள்ள
படங்களைக் கவனமாகக் கையாளவேண்டும். க்கள். நடிகர்  சோமசுந்தரத்தினை நடிப்பினை ஒரு நாடகத்தில்
பார்த்து பிரமித்துப் போனேன். இரட்டை வேடங்களில் அவ்வளவு அற்புதமாக
நடித்திருந்தார். அவரை இந்தப் படத்தின் கதாநாயகனாகப் பார்ப்பது மிக்க
மகிழ்ச்சி. இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குநர் பாலா பேசியதாவது ;
இந்தப் படத்தினை முதலில் நான் தான் தயாரித்திருக்க வேண்டும். S.R. பிரபு
என்னை விட சிறந்த தயாரிப்பாளர். படம் நிச்சயமாக வெற்றி பெறும்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்