தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்!

தனா இயக்கும் “படைவீரன் “படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்

EVOKE PRODUCTIONS ஏ. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்னத்தின் துணை இயக்குநராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய கதாபத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குநர் மனோஜ் குமார், இயக்குநர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேலையில் சமீபத்தில் “படைவீரன்” படத்தை பார்த்த தனுஷ் படத்தை வெகுவாக பாராட்டியதுடன், இந்த வெற்றிப் படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பி ஒரு பாடலை பாடி தருவதாக கூறி, உடனடியாக இயக்குநர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, விஜய் யேசுதாஸ் மற்றும் கவிஞர் பிரியனுடன் அமர்ந்து, இசையமைப்பாளர் மற்றும் கவிஞருக்கு இயக்குநர் தனா சூழ்நிலையை விளக்கி, கார்த்திக்ராஜாவின் அருமையான டியூனுக்கு பிரியனின் வரிகளில் “ லோக்கல் சரக்கா பாரின் சரக்கா” என்ற படு துள்ளலான பாடலை பாடிக் கொடுத்தார் நடிகர் தனுஷ். ஒரு பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை. இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.