தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் புராண நாடக விழா!

deva-srtதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும்  தமிழ் நாடு அரசின் சார்பில் தமிழ்க் கலைகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கும் கலைஞர்களின் நலவாழ்விற்கும் பல்வேறு அரிய கலைத் திட்டங்களை உருவாக்கிச் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது. மேலும் இயல்,இசை,நாடகம், நாட்டியம், கிராமியக் கலைகள் தொடர்பான பல்வேறு விழாக்களையும் சிறப்புடன் நடத்தி வருகின்றது.

தமிழ் நாடகங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வண்ணம் புதிய வரலாறு மற்றும் புராண நாடங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய , நாடகம் ஒன்றுக்கு ரூபாய் 1.50 லட்சம் வீதம் 5 நாடகங்களுக்கு ரூபாய் 7.50 லட்சம் தொகையை தமிழக அரசு  நாடகக் கலையையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வண்ணம் வழங்கி இருக்கிறது. அவ்வகையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், நாரத கான சபா ட்ரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தினசரி மாலை  6.30 மணியளவில், டி.டி.கே சாலையில் உள்ள சத்குரு ஞானாநந்தா ஹாலில் புராண நாடக விழாவை மிகச் சிறப்பாக நடத்துகிறது.

இவ்விழா   08.03.2015 ல்   திரு.டி.பாலசுந்தரம் அவர்களின் தமிழரசன் தியேட்டர்ஸ் வழங்கிய  ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் என்னும் புராண நாடகம் நடைபெற்றது. மேலும் இதை தொடர்ந்து  09.03.2015 அன்று மதுரை தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் வழங்கும்  பக்தப்பிரகலாதா, 10.03.2015 அன்று  திரு.கே.ஆர்.எஸ்.குமார் அவர்களின் நாடகக் காவலர் கலைக்கூடம் வழங்கும் அவதாரப்புருஷர் ஸ்ரீ ராமானுஜர், 11.03.2015 அன்று திரு.சான் பாஷா அவர்களின் தேவி கலைக்கூடம் வழங்கும் காரைக்கால் அம்மையார்,  12.03.2015 அன்று திரு.நாடகப் பணி அருணகிரி அவர்களின் கங்கை கலாலயா வழங்கும் கிள்ளிவளவன் காதல் ஆகிய புராண நாடகங்கள் மேடையேற்றம் செய்யப்பட உள்ளது.

அனைவரும் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவினை தமிழ் நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் திரு.தேவா அவர்கள், உறுப்பினர் செயலாளர் திருமதி. சித்ரா விஷ்வேஸ்வரன் அவர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.