தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது’ பொட்டு ‘

pottu1ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் பொட்டு

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம்,ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.                                                 

pottu2கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்    வடிவுடையான்.                                      

படம் பற்றி இயக்குநர் வடிவுடையானிடம் கேட்டோம்..                                              

” பக்கா ஹாரர்  படமாக இது இருக்கும். படப்பிடிப்பு மொத்தம் 90 நாட்கள் நடைபெற்றது. பரத் இந்த படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார். நமீதாஇதுவரை நடிக்காத  வித்தியாசமான வேடமம் ஏற்றுள்ளார்.தமிழில்  ( பொட்டு ), தெலுங்கில்  ( பொட்டூ ) , ஹிந்தியில்  ( பிந்தி )  என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில்   இந்த படத்திற்காக பாடலாசிரியர் ஏக்நாத் எழுதி அம்ரீஷ் இசையில் உருவான “ அடி போடி சண்டாளி “ என்ற பாடல் காட்சியை கேரளாவில் உள்ள அதிரம்பில்லி என்ற இடத்தில் உள்ள அருவியில்  பரத் – சிருஷ்டி டாங்கே பங்கேற்க படமாக்கினோம். அந்த பாடல் தற்போது பட்டி தொட்டியெங்கும் பட்டையக் கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது பொட்டு”  என்றார் இயக்குந ர் வடிவுடையான்.