தம்பி நாவை அடக்கு : விஷாலுக்கு கலைப்புலி எஸ். தாணு எச்சரிக்கை!

IMG_7066தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில்  முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத்லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது.

 திடீர்த் திருப்பமாக சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட த் தலைவர் பதவிக்கு போட்டியிட மனுத் தாக்கல் செய்த டி.சிவாஅம்மனுவைத் திரும்பப் பெற்று, போட்டியிலிருந்து விலகியதுடன், ராதாகிருஷ்ணன் அணிக்கு இச்சந்திப்பில் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

IMG_6998நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்படி தலைவர் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் பதவிக்கு கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, கவுரவ செயலாளர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், ஜே.சதீஷ்குமார் மற்றும் பொருளாளர் பதவிக்கு விஜயமுரளி ஆகியோர் போட்டியிட உள்ளார்கள். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 23 பேர் போட்டியிடுகிறார்கள்.

இவ்விழாவில் கலைப்புலி எஸ்.தாணு  பேசும் போது
” இளையதலைமுறைக்கு வழிவிட்டு நான் விலகியிருந்தேன். விஷாலின் பேச்சு, நடை, உடை, பாவனை பார்த்து தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றுதான் நான் இங்கு வந்தேன்.

தம்பி டி.சிவாவை முரளிதரன் முன் மொழிந்த போது சரி என்று நினைத்திருந்தேன். பலரும் ஏன் இத்தனை அணி என்று கேட்டார்கள். விஷாலின் யதேச்சதிகாரம், ஆணவம். அகங்காரம் கொஞ்ச நஞ்சமல்ல.  அவரது நடவடிக்கை  மிகவும் மோசமாக இருந்தது.

தேசிய விருது பெற்ற சேரனுக்கு 5000 ரூபாய் தரச் சொல்கிறார் 2012ல் ‘நீதானே என் பொன் வசந்தம் ‘ படத்துக்கான சிக்கலில் கௌதம்மேனன்  நின்ற போது ஒரு கோடி ரூபாய்  நான் உதவி செய்தேன்.

‘பாயும்புலி’ பட சிக்கல் வந்த போது விஷால் போனை ஆப் செய்து பதுங்கி விட்டார். பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா?
ஒரு முறை 50 லட்சரூபாய் பிரச்சினையில் என்னிடம் வந்து பவ்யமாகக்  கெஞ்சினார்.

சங்கத்தில் சிரமப்படும் 1512 தயாரிப்பாளர்களில் 12 பேர் உன்னை வைத்துப் படமெடுத்தவர்கள். விஷால் தம்பி வாயை அடக்கிப் பேசு நாவடக்கம் தேவை. தம்பி  விஷால் “மதகஜராஜா’ 30 கோடி பிரச்சினையில் உள்ளது.

எங்களை குறை சொல்வதற்கு விஷால் என்ன செய்தார். அந்த அணியில் போட்டியிடும் கவுதம் மேனன் படமான ‘நீதானே என் பொன்வசந்தம்’ பிரச்சினைக்கு நான் 1 கோடி ரூபாய் கொடுத்து உதவினேன். தான் நடித்த ‘பாயும் புலி’ பிரச்சினையின் போது ஓடி ஒளிந்தவர்தான் விஷால்.

அனைத்து தயாரிப்பாளர்கள் வீட்டுக்குச் சென்று இப்போது ஒட்டுக் கேட்டுப் போகிறார். அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் வீட்டுக்குச் சென்றாரா?. அவருடைய படத்துக்கு பணம் கொடுத்த பைனான்சியர்கள் கஷ்டப்படுகிறார்கள்.தம்பி விஷால் உன்முகம் பார்க்க மோசமாக இருக்கிறது.சகிக்க முடியவில்லை.போய் பேஷியல் போட்டுக்கொள்.உன்னை வைத்துப் படமெடுப்பவர்கள் பாவம்.உன்னை எல்லாம் வைத்து நாங்கள் படமெடுக்க மாட்டோம்.

நீ என்ன புரட்சி செய்தாய்? புரட்சிதளபதி என்கிறாயே.. உன்னைப் பற்றி ஏராளமான புகார்கள் இருக்கின்றன. வரும் 26ஆம் தேதி ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.

 ஞானவேல்ராஜா என்னென்னவோ பேசுகிறார் . IMG_7002அவருக்குத்தான்  இந்தச் சங்கம் நிறைய பஞ்சாயத்துகளில் பேசி சரி செய்து கொடுத்துள்ளது.கொம்பன்’ படத்துக்கு பிரச்சினை வந்தபோது அழுததும் நாங்கள் உதவியதும் ஞானவேல்ராஜாவுக்குநினைவில்லையா?

பிரகாஷ்ராஜ் ஏதேதோ பேசுகிறார் அவர் ஒழுங்காக நேரத்துக்குப் படப்பிடிப்பு போனதுண்டா? உங்கள் மேல் எவ்வளவு புகார்கள்?

இப்படிப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் போகலாமா? ”
இவ்வாறு தாணு பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் முன்னேற்ற அணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.