தொப்பி நாயகி ரக்ஷாராஜ்:இன்னொரு கேரள வரவு

raksharaj-1மலையாளப் படஉலகம் நமக்கு பல்வேறு கதாநாயகிகளைத் தந்துஇருக்கிறது. தற்போதிய  வரவு  புதுமுகம் ரக்க்ஷாராஜ்.அரபிக்கரை ஓரம் இருந்து வரும் அடுத்த பெரிய வரவு ரக்க்ஷா  ராஜ் என கணிக்கின்றனர் திரை உலக வல்லுனர்கள். யுரேகாவின் இயக்கத்தில்  ராயல் ஸ்க்ரீன்ஸ் தயாரிக்கும்  ‘தொப்பி’ திரைப்படத்தில் அறிமுகமாகும் ரக்க்ஷா பரதநாட்டியம் , குச்சிபுடி,மோகினி ஆட்டம், மற்றும் பல நடனக் கலைகளில் பால்யத்தில் இருந்தே பயிற்சி பெற்றவர். சமூக துறைசார்ந்த படிப்பில் பட்டம் பயின்ற ரக்க்ஷா அந்தக் கல்வியின் அடிப்படையில் மலையாள கலாசாரத் துறை மற்றும் கலைநிலையம் மூலம் தனது நடிப்பு ஆற்றலை வெளிபடுத்தினார்.’மாத பெயரம்பர ‘என்கிற அமைப்பின் மூலம் உலகெங்கும் சென்று தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டார்.

தமிழ்ப் படங்கள் மீதும் , தமிழ்மீதும் பேரார்வம் கொண்டரக்க்ஷாதனதுஅறிமுக படமான ‘தொப்பி’ பற்றிபேசும்போது ‘ தொப்பி என் மனத்தைக் கவர்ந்தபடமாகும்.அறிமுகமாக சிறந்தபடமும் கதையும் அவசியம் என்றால் , தொப்பி எனக்கு சிறந்த அறிமுகம் தரும் படமாகும். படப்பிடிப்பு நடந்த ஒவ்வொருநாளும் எனக்கு நல்ல பாடமாக இருந்தது.என்னுடைய சுயநம்பிக்கையும் நாளுக்குநாள் உயர்ந்துக்கொண்டேஇருந்தது.படக்குழுவினர் ஒருகுடும்பம்போல் என்னிடம் பாசம்பாராட்டியதை என்னால் மறக்கமுடியாது .திரைஉலகில் மென்மேலும் சாதிக்க நினைக்கும் எனக்கு ‘தொப்பி’ மூலம் கிடைக்கும் பாராட்டு சிறந்த உரமாகஇருக்கும்’ எனநம்பிக்கைதெரிவித்தார்.raksharaj3