“நகல்” படம்   இன்று தொடங்கியது!       

A.R கிருஷ்ணா மோகன் இயக்கத்தில்,S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில்,  சிவசக்தி நடிப்பில்  உருவாகவுள்ள திரைப்படம்      இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கிவருகிறார்கள்.அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன.அதில் மிகவும் விறுவிறுப்பான Sci-  fi படமாக உருவாகவுள்ளது இந்த “நகல்” திரைப்படம்.

S2S பிக்சர்ஸ் தயாரிப்பில்,இயக்குநர் A.R.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில்உருவாகவுள்ள இப்படத்தில் “சிவசக்தி” கதாநாயகனாகவும்.மும்பை மாடல் “ரிஷ்மா” நாயகியாகவும்  நடித்துள்ளனர்.நாயகி பலகுறும்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.       

கதை மற்றும் திரைக்கதை சதுர்த்தி ஐயப்பன், F.s.பைசல் இசையில்,ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்துக்கு ஸ்டன் சிவா ஸ்டன்ட்,மணிவர்மா மற்றும் ஷரன் சந்தரம் ஆகியோர் கலையை கவனிக்கின்றனர்.

 Scifi த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழின் முன்னனி நடிகர்கள் பலரிடம்பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் மங்களகரமான பூஜையுடன்துவங்கியது.ஜுலை 9ஆம் தேதி இப்படத்தின் படபிடிப்பு துவங்கி 40நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.படத்தின் 75% படபிடிப்புசென்னையிலும்,மீதம் உள்ள படபிடிப்பு வெளிநாடுகளிலும் உருவாகவுள்ளது.மெடிக்கல் ரீதியான காட்சிகளை வெளிநாடுகளில்படமாக்கவுள்ளனர் குழுவினர்.பாடல்கள் ஊட்டியில் உருவாகவுள்ளது.

 இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர், ஒளிப்பதிவாளர் நட்டிநட்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுவிழாவை சிறப்பித்தனர்.