நயன்தாராவிடம் கதை சொல்ல பயந்த இயக்குநர்!

IMG_3891கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிப்பில் பொடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர் பிரபு  தயாரித்து அஷ்வின் சரவணன் இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாயா”. இத்திரைப்படம் வருகிற செப்டெம்பர் பதினேழாம் தேதி வெளிவரவுள்ளது.

சூப்பர்  நேச்சுரல் படமான இதில் நடிகர் ஆரி  முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். படத்துக்கு இசை:-ரோன் ஏதன் யோகன் ;கேமரா :- சத்யன் சூர்யன், படத்தொகுப்பு:- சுரேஷ், ஆர்ட்:- தா.ராமலிங்கம் ; காஸ்ட்யும் டிசைன்:- வாசுகி பாஸ்கர்.

படத்தை பற்றி இயக்குநர் அஷ்வின்சரவணன் பேசும் போது

”நான் இந்த படத்தின் கதையை எழுதும் போது என் மனதில் யாரையும் வைத்து எழுதவில்லை அதற்கு காரணம்  யாரையாவது நினைத்து நான் கதை எழுதி அவர்கள் படத்தில் நடிக்க இயலாமல் போனால் என்னால் அதில் இருந்து வெளியே வர முடியாது. படத்தின் தயாரிப்பாளர் கதை கேட்டவுடன் இந்த கதையில் முக்கிய பாத்திரமாக வரும் அந்த  மதர் கதாபாத்திரத்தில் நன்கு தெரிந்த முகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.

உடனேயே எங்கள் மனதுக்கு நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது, உடனே தயாரிப்பாளர் நயன்தாராவிடம் பேசி என்னை கதை சொல்ல அனுப்பி வைத்தார். நயன்தாராவிடம் கதை சொல்ல எனக்குள் சின்ன பயம் இருந்தது. நான் கதையை சொல்லி முடித்ததும் அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. கண்டிப்பாக படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார்.IMG_4456

இந்த படத்தை படமாக்க மொத்த குழுவும் ஒரு வருடம் கடுமையாக வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல் உழைத்தது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். நான் ஒரு வருடம் அவர்கள் எல்லோரையும் அதிக அளவில் தொல்லை  செய்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். அதை பொறுத்துக் கொண்டு  அவர்கள் முழு சுதந்திரத்தோடு கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கி உள்ளனர்.

முக்கியமாக படத்தின் கேமரா மேன் சத்யா படத்தை லோ லைட்டில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக மிக தத்ரூபமாக படம்பிடித்துள்ளார். படத்தில் ஆரி ஓவியராக நடித்துள்ளார். அவர் பிரபலமான  பத்திரிகைகளுக்கு ஓவியம் வரையும் நபராக வருகிறார். அவர் வரையும் ஓவியங்களில் இருந்து தான் கதையின் ஒவ்வொரு முடிச்சும் அவிழும். இந்த படத்தில் நிறைய ஓவியம் சார்ந்த கதை சொல்லல் இருக்கும். இந்த படத்தின் சவுண்ட் டிசைன் பெரிய அளவில் பேசப்படும். நயன்தாராவுக்கு இந்த படத்துக்கு ஏற்றவாறு மேக்கப் போடப்பட்டுள்ளது.” என்றார்.

படத்தை பற்றி நடிகர் ஆரி பேசும் போது ; இந்த படத்தில் முதலில் நடிகர் நாணி அவர்கள் நடிப்பதாகத்தான் இருந்தது. பின்னர் சில காரணங்களால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் இந்த கதையை கேட்டதும் நீங்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கி கொண்டு நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன் அதற்குக் காரணம் படத்தின் கதை.

படத்தை வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்முரளி சார் நான் வெளியிட்ட பேய் படங்களிலேயே சிறந்த படம் இது தான் என்று கூறியுள்ளார். முதன் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் ட்ரைலர்  உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.”என்று கூறினார்.