நீண்ட இடைவெளிக்குப் பின் ஜீவன் நடிக்கும் ‘அதிபர்’

jeevan-skநீண்ட இடைவெளிக்குப் பின்  ஜீவன் நடிக்கும்  படம் ‘அதிபர்’. பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டுடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக P.B..சரவணன் இணை தயாரிப்பில் டி.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகிறது.

இந்தப் படத்தில் ஜீவன்  நீண்ட இடைவெளிக்குப் பின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள் மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, ராஜ்கபூர், சரவணசுப்பையா, பாரதி கண்ணன், சங்கிலிமுருகன், பாவா லட்சுமணன், மதன்பாப், வையாபுரி, சம்பத்ராம், மோகனராம், க.தா.கா.திருமாவளவன், ரேணுகா, கோவை சரளா, அழகு, கவிதா பூஜாரி, கோவை செந்தில், மாயி சுந்தர், தெனாலி, சுருளி, ஸ்டில்குமார், ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு     –   பிலிப்ஸ் விஜயகுமார்.

இசை     –     விக்ரம்சிங்கா

பாடல்கள்   –    நா.முத்துக்குமார், விவேகா     தயாரிப்பு   –    T.சிவகுமார்.

எழுதி இயக்குபவர் சூர்யபிரகாஷ். இவர் மாயி, திவான், மாணிக்கம், போன்ற படங்களை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநர் சூர்யபிரகாஷிடம் கேட்டபோது..

”செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன் என்று வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வாழும் சிவா கதாபாத்திரத்தில் ஜீவன். நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலாகக் கொண்டு வாழ்ந்து  கொண்டிருக்கும் ஈஸ்வரன் கதாபாத்திரத்தில் ரஞ்சித். இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம் தான் கதை!

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா, பாங்காக், லங்காவி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது”என்றார் சூர்யபிரகாஷ்.