பாகுபலி நாயகன் பிரபாசுக்கு மேலும் ஒரு சிறப்பு அங்கீகாரம்!

prabas4சாஹு படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் இளைய தலைமுறை நாயகன் பாகுபலி புகழ் பிரபாசுக்கு ஒரு புதிய சிறப்பு  அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாகுபலியின் இரண்டு பாகங்களிலும் முன்னணி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்ற இளம் நாயகன் இப்போது தேசிய நாயகனாகத் திகழ்கிறார் . சமீபத்தில் GQ இதழ் வெளியிட்டுள்ள “அதிக செல்வாக்கு நிறைந்த  இளம் இந்தியர்கள்” என்கிற தரவரிசைப் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த இதழின் பட்டியலில் இடம் பிடித்துள்ள மற்ற பிரபலங்கள் பி.வி. சிந்து, டில்சித் டொசாஞ்ஜ், அலாக்ரிடா ஸ்ரீவஸ்தவா, கரண் கில், மனு சந்திரா, ராஜ் குமார் ராவ், பாட்ஷா, சஞ்சய் கார்க், ராதிகா ஆப்தே, மற்றும் நீரஜ் சோப்ரா.

பாகுபலி 1 படத்தின்  2ஆம் ஆண்டு நிறைவு  நாளை முன்னிட்டு நடிகர் பிரபாஸ் நன்றி தெரிவித்துக் கூறியுள்ளதாவது :

‘இன்றோடு பாகுபலி-1 திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூர்கிறேன். பாகுபலி குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும் மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாகப் பணியாற்றிய, அந்த நாட்களின் நினைவுகள்  என்னை சிலிர்ப்போடு திரும்பிப் பார்க்க வைக்கின்றன. என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான் இந்த வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன். குறிப்பாக எஸ். எஸ். ராஜமௌலி சாருக்கும், பாகுபலி குழுவினர் அனைவருக்கும் இந்த மாபெரும் வெற்றியை, நன்றியோடு சமர்ப்பிக்கிறேன்.” எனக் கூறியுள்ள்ளார்.