‘பாட்டில்’ கதை பேசிய பாடல் வெளியீட்டு விழா!

IMG_0208பெதர்டச் எண்டர் டெய்மெண்ட்ஸ் தயாரிப்பில் அருண் விஜய் நடிக்கும் படம் ‘வா’ இதை தயாரிப்பவர் அருண் விஜய் மாமனார் டாக்டர் மோகன்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா  நடந்தது. வரவேற்புரையாற்றிய இயக்குநர் ரத்தினசிவா,தான் உதவி இயக்குநர் ஆக பட்ட சிரமங்களைக் கூறினார். லிங்குசாமியைப் பார்த்த போதெல்லாம் ‘ட்ரைபண்ணு’ என்றே சொல்லி வந்தாராம். யாரோ ஒரு நண்பரை போதையில் மூழகடித்து பன்னீர் செல்வத்திடம் உதவியாளர் ஆனாராம். பல பேருடைய குடி அனுபவத்தை பகிரங்கப்படுத்தி னார். இதற்குப் பதிலளித்துப் பேசிய லிங்குசாமி,தான் பாக்யராஜிடம் உதவி இயக்குநர் ஆக விரும்பி அவரது வீடு அலுவலகம் என்று அலைந்ததைக் கூறினார். பாக்யராஜை நேரில் பார்த்தவுடன்  நேரில் பேச தைரியமில்லாமல் பயந்து பதுங்கிக் கொண்டதையும் கூறினார். மணிரத்னத்திடம் சேர அலுவலகம் சென்று காத்திருந்த கதையையும் கூறினார். இனி குடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாகவும் கூறினார்.

தயாரிப்பாளர் பேசும்போது வெங்கடேஷ் ஒரு மொடாக்குடிகாரர் என்றார். இரவு 10 மணிக்கு தொடங்கினால் 1.45வரை குடிப்பார். வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் வருவதற்குள் 10 போலீசிடம் வாயைநான் ஊதிக் காட்ட வேண்டியிருக்கும் ” என்றார்.

நிகழ்ச்சியில் கௌதம் மேனன், எஸ்.பி.ஜனநாதன்.கார்த்திகா, பன்னீர்செல்வம், சதிஷ், சுஜாவருணி, விவேகா, கருணா, ஆகியோரும்.பேசினார்கள். இசையமைப்பாளர் தமன் வரவில்லை. ஒரு இசை விழாவில் அநியாயத்துக்கு ஆல்கஹால் வாசனை வீசியது.