பிறந்த நாள் பிரபாகர்!

திரை நட்சத்திரங்களின் பிறந்த நாளாகட்டும் பத்திரிகையாளர்களின் பிறந்த நாளாகட்டும் பல ஆண்டுகளாக அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி நினைவூட்டுவது ராயல் பிரபாகரின் வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது.அவரவர் பிறந்த நாள் அவர்களுக்கே மறந்து போன நிலையில் இவர் சரியாக நினைவூட்டி இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

முக்கியமான ஆளுமைகளில் பிறந்தநாளின் போது கோயிலுக்குச் சென்று அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் பெற்று வந்து அவர்களிடம் வழங்குவதையும் ராயல் பிரபாகர் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.

இப்போது பிறந்தநாளை முன்னிட்டு அவரவர் கைகளில் மரக்கன்றைக் கொடுத்து நடச் செய்து வருகிறார். இயக்குநர் சீனு ராமசாமியின் பிறந்தநாளில் தொடங்கிய இந்தச் செயல்பாடு இயக்குநர் பாக்யராஜ் , ஒய்.ஜி. மகேந்திரன் என்று இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இவரது இந்தப் பணியை கவனித்து வந்த மக்கள் தொடர்பாளர் ஏ.ஜான் தான் பணிபுரிந்த ‘பாப்பிலோன்’ படத்தின் அறிமுக விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் மரக்கன்று கொடுத்து இவரைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்.அதற்கு வாய்ப்பு கொடுத்து தயாரிப்பாளரும் ஊக்கப்படுத்தி இருக்கிறார்.ராயல் பிரபாகருக்கு வாழ்த்துகள்.

செடி நடுவதுடன் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று கண்காணித்து வாருங்கள். செடி மரமான செய்தியையும் ஒருநாள் கவனித்துக் கூறினால் பலருக்கும் அது ஊக்கமாக இருக்கும்.