‘பேய்கள் ஜாக்கிரதை’ விமர்சனம்

peigaljakrathai1விட்டலாச்சார்யா காலத்துக்குப் பிறகு பேய் பட சீசன் முனி படம் மூலமாக துவங்கியது.இது பேய்களின் காலம்.அவ்வகையில் ‘பேய்கள் ஜாக்கிரதை’ படமும் பேய்களின்  பின்னணியில் செண்டிமெண்ட் கோர்வையாகத் தரப் பட்டுள்ளது. படத்தில் , தம்பி ராமய்யா  தான் ஹீரோ  என்கிற அளவுக்கு  கதை நாயகனாக முக்கால்வாசிப் படத்தை தாங்கி நிற்கிறார். தன்னைச் சுற்றி உதவியாளர்களை சம்பளத்துக்கு வைத்திருக்கிறார். பெரிய மனுஷத் தோரணையில்  கொடுக்கல்-வாங்கல் , கட்டப் பஞ்சாயத்துக்கள் என கழுத்து சங்கிலிகளோடு  ர ஃ ப் & டஃபாக தோரணை காட்டுகிறார். இ டைச்  செருகலாக ,ரொம்பவே பேய் பயம் கொண்டவராக இரவு நேரங்களில் பயத்துடன் வாழ்கிறார்.இந்தப்பின்னணியில் சொல்லும் படியாக சுடுகாட்டு சீன்களும் உண்டு!
 டுபாக்கூர் அசிஸ் டெண்டுகளால்  தனக்கு பேய்களிடமிருந்து பாதுகாப்பில்லை என உணர்ந்து  பயம் ஒரு பொருட்டில்லாத அநாதை  இளைஞனை  ( ஜீவரத்தினம்) தன்னிடம் வேலைக்கு  சேர்த்துக் கொள்கிறார். நாயகி  ஈஷான்யாவுக்கு சராசரி நாயகி வேடம்.. ப்ச் ! ஆனாலும்  நாலைந்து பேய்களிடம்  சிக்குகிறது =தம்பி ராமய்யா குழு  .நாலைந்து பேய்களின்  உச்ச அட்டகாசம் நாயகனையும்  தம்பி ராமய்யா= வையும் நிம்மதியாக வாழ  விட்டதா  அல்லது அழித்து விடுகிறதா ? என்பது முற்போக்கான க்ளைமாகஸ்.  ஆஹா எத்தனை அழகுவுக்குப்  பின்  2- வது படமாக  இப்படம் இயக்கியிருக்கிறார் கண்மணி .பேய்கள் நம்மை பயமுறுத்தி அழிப்பவை அல்ல நம் முன்னோர்களின் ஆன்மா  என்கிற பாசிடிவ்  தாட்டை வலியுறுத்தி வந்திருக்கும் கதை. இப்படம் பப்படம் ஆகாமல்  நியாயமான செண்டிமெண்ட் காட்சிகளால் நிமிர்ந்து நிற்கிறது. பேய்களாக அலையும் தாய் தந்தை  மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அன்பில் லயிப்பதற்காக சென்று வரலாம் ஒரு முறை !