‘மயில் ‘சிறகொடிந்தது : ஸ்ரீதேவி மறைவு!

தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக அறியப்பட்ட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால்  காலமானார்.

1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதிவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் –ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தஸ்ரீதேவி

தனது  நான்கு வயதிலேயே .பி.நாகராஜன் இயக்கிய ‘கந்தன் கருணை’ திரைப் படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 1967ஆம் ஆண்டு வெளியான அப்படம் தெலுங்குகன்னடம்  மலையாளம் என்று வல்ல தென்னிந்திய மொழிகளிலும்குழந்தைநட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை இவருக்குப்  பெற்றுத் தந்தது.

அதைத்  தொடர்ந்து பல படங்களில் குழந்தைநட்சத்திரமாக நடித்து வந்த இவரை 1976ஆம்ஆண்டு மூன்று முடிச்சு படம் மூலம்கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

இவர் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன்ரஜினிகாந்த் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் வெற்றி படமா அமையவே  இவரது சினிமாவாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

தமிழ்தெலுங்குமலையாளம் என மூன்று மொழியிலும் இவர் கதாநாயாகியாக உயர்ந்தார்.முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும்முன்னணி யக்குநர்களின் படங்களிலும் அவர்இருந்தார்

பாரதிராஜாவின் பதினாறு வயதினிலேசிவப்பு ரோஜாக்கள்பாலு மகேந்திராவின்மீண்டும் கோகிலாமூன்றாம் பிறை என அவரது புகழ் உயர்ந்து பறந்தது.

பதினாறு வயதினிலே படத்தில் அவர் ஏற்ற மயில் பாத்திரம் பரவலான பாராட்டைப்பெற்று இன்றளவும் பேசப்படும் பாத்திரமாகும்.

இந்தியிலும் வாய்ப்பு வரவே ,இந்திக்கும் சென்றார்முதல் படம் “சோல்வா சாவன்” தோல்வியைதழுவினாலும்இரண்டாவது வெளியான “ஹிம்மத்வாலா” மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.இந்தி திரைப்பட உலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் திருப்புமுனையையும் பெற்று தந்தபடம்.

அதன் பிறகு மூன்றாம் பிறை மீண்டும் “சத்மா” என்கிற பெயரில் உருவான போது அதிலும்நடித்தார்அதில் இவருக்கு பெரும் புகழும் பாராட்டும் கிடைத்ததுஅதைத் தாண்டி,இன்றளவும் பல நடிகைகளுக்கு முன் மாதிரி படமாக திகழ்கிறது.  தன் பிறகு தொடர்ந்துஇந்தியில் ருபத்தி ஐந்து படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

தென்னிந்திய மொழியில் உச்சத்தில் இருந்த போது தந்தையை இழந்த ஸ்ரீதேவிஇந்தியில்உச்சத்தில் இருந்த போது தாயைப்  பறி கொடுத்தார்அப்போது ஸ்ரீதேவிக்கு ஆதரவாகஇருந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்திஅவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்ஸ்ரீதேவி என்று ஊடகங்கள் எழுதி வந்தன.

மிதுன் சக்கரவர்த்தியின் முதல் மனைவி சம்மதிக்கவில்லை என்பதால்போனிகபூரைதிருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவிஇவர்களுக்கு ஜான்விகுஷி என இரு மகள்கள்உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு1997ம் ஆண்டு திரையுலகில் இருந்து ஓய்வு பெற்ற  ஸ்ரீதேவி மீண்டும் 15 வருட இடைவெளிக்குப் பிறகு 2012ம் ஆண்டில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்து தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தொடர்ந்து விஜய் நடித்த புலி போன்ற சில படங்களில் நடித்தார் .

 தனது நடிப்பிற்காக தமிழ்நாடுந்திர மாநில அரசுகளின் சிறந்த டிகைக்கானவிருதுகளையும்கேரள ரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், 5 முறைஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றுள்ள ஸ்ரீதேவிகலைத்துறையில் இவர் ஆற்றி பணிக்காக2013ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ  விருது வழங்கி கௌரவித்துள்ளது.

4 வயதில் தொடங்கிய நடிகை ஸ்ரீதேவியின் திரையுலகப் பயணம் இதோ  54 வயதில் முடிந்து விட்டது.

தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார் ஸ்ரீதேவி.