மறந்துடுங்க மன்னிச்சிருங்க : வாயைத்திறந்து வாங்கிக்கட்டிக்கொண்ட ஜேம்ஸ் வசந்தன்

jamesvasantan2.jpg1இளையராஜா பற்றிப் பேசி வாயைத்திறந்து வாங்கிக்கட்டிக்கொண்ட  ஜேம்ஸ் வசந்தன் மறந்துடுங்க மன்னிச்சிருங்க  என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
உலகெங்கும் உள்ள ;தமிழ் உள்ளங்களுக்கு, 
 
சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால் தான் இந்த மன்னிப்பு  அறிக்கை.
இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும் , படத்தையும்  வைத்துக் கொண்டு  அவதூறான  கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள்.அதனால் தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன்.இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன்.நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்கக் கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம். நன்றி!’
இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.