முழுநேர நடிகரான கலை இயக்குநர் டி ஆர் கே கிரண் !

kiran-4‘திருதிரு துறுதுறு’ படத்தின்மூலம் கலை இயக்குநராக தமிழில் அறிமுகமான டி ஆர் கே கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

‘திருதிரு துறுதுறு’, கோ, அனேகன், 3, மயக்கமென்ன,குப்பி,வாமனன் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, இரண்டாம் உலகம் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். அவ்வப்போது சிறுசிறு வேடங்களிலும் நடித்து வந்த டி ஆா் கே கிரண், இப்போது முழுநேர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

விஷாலின் ‘பாயும் புலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், சி.வி.குமார் தயாரிப்பில் நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் பெயரிடப்படாத படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும்
ஜிவா ராம்நாத் கூட்டணியில் திருநாள் படத்திலும் நடித்துவருகிறார் அதேபோல்’வேலையில்லா பட்டதாரி – 2′ படத்தில் முக்கிய பாத்திரத்தில் டி ஆர் கே கிரண் நடிக்க உள்ளார்.இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் சின்னத்திரையில் கலை இயக்குநராக பணியை தொடங்கியவர் , மேலும், 3 புதிய படங்களில் முழுநேர நடிகராக நடிக்க உள்ளாராம். கிரண் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.