மூணு மணி நேரம் கதை கேட்பது எரிச்சலை உண்டாக்கும்: ஆர்யா

aarya-sfரடான் உலக குறும்பட விழா முதல் பதிப்பின் இறுதிச்சுற்று  நடந்தது! உலக அளவில் அமெரிக்காவில் இருந்து கலந்து கொண்ட குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து அகதிகளாகச்
செல்வதை மையப்படுய்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஓடம்’ முதல் இடத்தையும்,தொடர் பலி என்கிற திகில் கதையுடன் கூடிய அஞ்சலி இயக்கிய ‘நிழல்’  இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

இவற்றிற்கு பரிசளித்துப் பேசிய ஆர்யா

“குறும்படம் எடுப்பது வாய்ப்பு தேடும் உதவி இயக்குநர்களுக்கு அவசியமான ஒன்று…அதைவிட்டு விட்டு ஒரு மூணு மணி நேரம் கொடுங்க முழுக்கதையும் சொல்கிறேன் என்று கேட்பது எரிச்சலை உண்டாக்கும்…. பத்தாயிரம் சம்பள வேலைக்கே பதினைஞ்சு சர்டிபிகேட் தேவைப்படுறது…அப்படி இருக்கும் போது கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தை இயக்கிட  குறும்படம் தான் சர்டிபிகேட்…” என்றார்.
அதன் பின், இந்திய அளவில் இறுதிச்சுற்றுக்கு, ஒரு தெலுங்கு படத்துடன் ஐந்து தமிழ்ப்படங்கள் தேர்வாகியிருந்தன. அவை திரையிடப்பட்டு, கே.பாக்யராஜ்,சீனுராமசாமி, ரோபோ ச்ங்கர், கணேஷ் வெங்கட்ராமன் . லிசி உள்ளிட்ட பிரபலங்களால் முதல் மூன்று இடங்களுக்கான படங்கள்
தேர்வாயின.

ஜிகே இயக்கிய ‘அசரீரி’ முதல் இடமும், விவேக் -மனோ இயக்கிய’ தடை’ மற்றும் அஞ்சலி
இயக்கிய ‘இறுதிவரை ‘ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தன.கலந்து கொண்ட படங்கள் அத்தனையுமே ஏதோ ஒரு வகையில் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தன.என்று பாலாஜி மோகன் கூறினார்.

குறும்பட இயக்குநர்கள் அதிகளவில்
இயக்குநர்களாக மிளிர்கின்றனர்.அவர்களது படங்களில் இசையத்து தான் நானும் சிறப்பான இடத்தைப்
பிடித்திருக்கிறேன்…ஆகவே குறும்படம் சம்பந்தமாக எந்த உதவிகள் வேண்டுமானாலும்
செய்யக் காத்திருக்கிறேன் என்று சந்தோஷ் நாராயணன் கூறினார்.
நன்றியுரை நிகழ்த்திய ராதிகாவும் சரத்குமாரும் ஆர்யா பேச்சினை வழிமொழிந்தனர். இறுதிச்சுற்று நடைபெறும் முன்னரே தெலுங்கில் குறும்படம் இயக்க்கியவருக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்து விட்டது
குறிப்பிடத்தக்கது.