‘வந்தாமல’ குழுவினருக்கு திருநங்கை பாராட்டு

Vandha Mala Press Meet Stills (16)பொதுவாக படங்களில் திருநங்கைகள் கொச்சைப் படுத்துவதாக பேசப்படுவதுண்டு. ‘வந்தாமல’ படத்தில் நடித்ததில் தான் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக ஒரு திருநங்கை கூறினார்.

இகோர் இயக்கும் ‘வந்தாமல’ ஊடகசந்திப்பில் திருநங்கை மலைகா கூறும் போது. “ஐ படத்தில் திருநங்கை நடித்த போது பிரச்சினை வந்தது எனவே அப்படி எதுவும் வரக் கூடாது என்று காட்சிகளில் வசனங்களில் கவனமாக இருந்தோம். பார்த்து பார்த்து நடித்தோம் .பார்த்து பார்த்து பேசினோம்.

இந்தப் படப்பிடிப்பில் என்னையும் சகமனுஷியாக அன்போடு மரியாதையாக நடத்தினார்கள். எனக்கு எந்த அசௌகரியமும் ஏற்படவில்லை. அவர்களில் ஒருவராக நானும் இருந்தேன். அவர்களுக்கு என் நன்றி ” இவ்வாறு திருநங்கை மலைகா  கூறினார்.

இது ஒரு நான்கு குப்பத்து இளைஞர்களின் வாழ்வும் போக்கும் பற்றிய கதை. இப்படத்தில் நாயகியாக பிரியங்காவும் குப்பத்து தாதாவாக வியட்னாம் வீடு சுந்தரமும் நடித்துள்ளனர்.