வாழ்க்கையைத் தொலைத்த 3 இளைஞர்களின் கதை “பட்டய கிளப்பும் பசங்க”

DSC_0447பிரபல இயக்குநர் வினயன் தமிழில் இயக்கிய “காசி” ,“என் மன வானில்”, “அற்புதத் தீவு” ஆகிய படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர் அனூப்ராஜ். இவர் இயக்கும் முதல் படம் “பட்டய கிளப்பும் பசங்க”

திறமையுள்ள இளம் இயக்குநர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை ஊக்குவித்து வரும் வித்தியாசமான தயாரிப்பாளர் ரூபேஷ் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

புதுமுகங்களாக மூன்று ஹீரோ, மூன்று ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சஜின் வர்கீஸ், ’நியூ செந்தில்’ பாஷாணம் சாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் குறித்து இய்க்குநர் அனூப்ராஜ் கூறுகையில், ‘சுயபுத்தி இல்லாமல் பிறர் சொல்புத்தியால் வாழ்க்கையத் தொலைத்த மூன்று இளைஞர்களைப் பற்றிய கதை இது. பணம் சம்பாதிக்கும் ஆசையில், கையில் இருக்கும் பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் பறிகொடுக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்தை ரிசார்ட் ஒன்றில் முதலீடு செய்து பண இழப்பு மட்டுமின்றி, பெரும் சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார்கள்.

அதிலிருந்து இவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள்? என்பதை நகைச்சுவையாகச் சித்தரிக்கும் படம்தான் ‘பட்டய கிளப்பும் பசங்க’ என்று அனூப்ராஜ் கூறினார். முழுநீள காமெடி, ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.