விஜய் சேதுபதி- சமுத்திரக்கனி இணையும் புதிய படம்: சீ.வீ.குமார் தயாரிக்கிறார்!

Vijay-Sethupathi-in-newசீ.வீ.குமார் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” தயாரிப்பில்
கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” பெருமையுடன் வழங்கும்
“புரோடக்ஷன் நெ.14”

மக்கள் எதிர்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றி பெற்ற படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வீ.குமாரின்“திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்”.

தற்போது திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் தனது 14வது படத்தின் தயாரிப்பை தொடங்கியுள்ளது. சூதுகவ்வும்  வெற்றி படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஸ்டுடியோ கீரின் நிறுவனம் வழங்குகிறது.

விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத்தொக்குப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நகரின் முக்கியஇடங்களில் நடைபெறவுள்ளது.