விஜய் படப்பிடிப்பில் இளவரசி போல வாழ்கிறார் ஹன்சிகா!

hancika6-2bவருகிற  2015   ஆம்  ஆண்டு   எப்படிஇருக்கும்?   ஆரூடங்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் அப்பாற்பட்டு ஹன்சிகாவுக்கு அது பொன்மயமாகத்தான் இருக்கும் என்கின்றனர் திரைத்துறையினர். தனது வசீகர த்தால் இளைய உள்ளங்களையும் , ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும்மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் பெற்றுள்ள  ஹன்சிகா 2015 ஆம்  ஆண்டின் முதல் விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். ‘அரண்மனை ‘திரைப்படத்தின் மாபெரும் வெற்றி தந்த தன்னைம்பிக்கையுடன் அவர் கூறியதாவது’ அரண்மனை’  திரை உலகில்எனக்கு ஒரு விசாலமான  இடத்தை  தந்து உள்ளது. என்னுடைய திறமை மேல் நம்பிக்கை கொண்டு அந்த  பிரமாதமான கதாபாத்திரத்தை சுந்தர் .சி  சார் எனக்கு  அளித்ததற்கு நான் கொடுத்து வைத்து  இருக்க  வேண்டும்’

அவர் தொடர்ந்து தன்னுடைய படங்களில் ,வித்தியாசமான கதாபாத்திரங்கள் எனக்கு வழங்கி வருகிறார்.பொங்கல் அன்று வெளிவரும் ‘ஆம்பள’ படத்தில் விஷாலுக்கு  ஜோடியாக நடித்து உள்ளேன்.நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள இந்தப்படம் ஏற்ற படமாகஇருக்கும். டிசம்பரில் வெளிவர இருக்கும் ‘மீகாமன்’ படத்தில்ஆர்யாவுக்கு இணையாக நடித்துஉள்ளேன்.இந்தபடம் Hollywood படங்களுக்கு இணையான படமாக இருக்கும்.அடுத்து வெளிவரும் ‘ உயிரே உயிரே’ படத்தில் என்னுடைய வயதுக்கு உகந்த கதாபாத்திரத்தில் நடித்து உள்ளேன்.அடுத்து நான் மிகவும் எதிர்பார்க்கும்  ‘வாலு ‘ எனக்கு  மிக  பொருத்தமான படமாகும் .மிகவும் துடிப்பான  வலிமையான பாத்திரம். இதற்கெல்லாம் மேலே விஜய்  சாருடன், சிம்புதேவன்  இயக்கத்தில் நடிக்கும்  பிரம்மாண்டமான படைப்பு.இந்தப் படத்தி ல் நான் இளவரசியாக நடிக்கிறேன் .படப்பிடிப்பில் நான்இளவரசியாகத்தான் உணர்கிறேன்.சிலர் எனக்கு அதிர்ஷ்டம்என்கின்றனர். கடின உழைப்புடன் விடாமுயற்சி இருந்தால் வெற்றிகிட்டும்.என்னநடந்தாலும் , நான் என்கடமையில் கண்ணாக இருப்பேன் ‘ ‘என்று கூறிவிட்டு தனக்கே உரிய மந்திரப் புன்னகையோடு   விடை  பெற்றார் ஹன்சிகா .   hansika-st