வெளிப்புறப் படப்பிடிப்பில் வாந்தி எடுத்த கதாநாயகி நடிகை : படக்குழு அதிர்ச்சி

avalukkenna-amவெளிப்புறப் படப்பிடிப்பில்  ஒரு கதாநாயகி நடிகை வாந்தி எடுத்தார்.அதைப் பார்த்து படக்குழுவினர்  அதிர்ச்சி அடைந்தனர்.இது பற்றிய விவரம் வருமாறு:

சினிமா பல இளைஞர்களை ஈர்த்து வருகிறது. எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் 22 வயதில் தயாரிப்பாளராகி இருக்கிறார். அவர் தயாரிக்கும் படம் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ .

இப் படத்தை இயக்குபவர் ஏ.கேசவன்.இது இவரது முதல் படம்.

காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி அடைந்த மூன்று பேர் தங்களுடன் வந்து சேர்ந்த நான்காவது நண்பனின் காதலை எப்படி வெற்றி பெற வைக்கிறார்கள் என்பதுதான் கதை.

இது காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான படம்.

நடிப்பவர்கள் பலரும் புதியவர்கள். பூவரசன், விஜய்கார்த்திக், விக்கிஆதித்யா, சபரி என நான்குபேர் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள். பிரதான நாயகியாக டெல்லி விளம்பர மாடல் அனுபமா பிரகாஷ் அறிமுகமாக ரூபாஸ்ரீ. சத்யா, நிவிஷா என மேலும் மூன்று புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.பவர்ஸ்டார் சீனிவாசனும் இருக்கிறார்.

கதைக்களம் கோவை என்றாலும் மதுரைக்குக் கதை பயணிக்கிறது. கோவை,மதுரை தவிர கொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி, கேரளா ஆலப்புழா போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

கொடைக்கானலில் மிக உயரத்தில் படப்பிடிப்பு நடத்திய போது நாயகி அனுபமா உள்பட பலருக்கும் மயக்கம் வந்து வாந்தி எடுத்துள்ளனர். அதைப் பார்த்து படக்குழுவினர்  அதிர்ச்சி அடைந்தனர்.

ராசிபுரத்தில் ஒரு பழைய மருத்துவமனையில் எடுத்தபோது ஒவ்வாமையால் பலரும் காய்ச்சல் பேதி என்று நோயாளியாகி சிரமப்பட்டு இருக்கிறார்கள்.

படத்தில் 5 பாடல்கள். எல்லாவற்றையும் வைரமுத்து எழுதியுள்ளார். ஐந்தும் வெவ்வேறு நிறம் வெவ்வேறு தளம் என்று சொல்லும்படி இருக்கும். நட்பு, காதல்,பயணம், தோல்வி, தாய்ப்பாசம் இப்படி பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தைப்பேசும்.

படத்துக்கு ஒளிப்பதிவு நவநீதன். இசை டேவிட் ஷார்ன். இவர் மலையாளம், இந்தியில் ஆல்பங்கள் இசையமைத்தவர். படத்தொகுப்பு. கோபிகிருஷ்ணா, நடனம்: ஷங்கர், ஸ்டண்ட்: எஸ்.ஆர்.முகேஷ், கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி.

தயாரிப்பு மேற்பார்வை: அன்பு செல்வன், கதிரவன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ். கதிரவன் தயாரிக்கும் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக உருவாகி வருகிறது.