20 பேர் கதை கேட்டு ஓகே செய்தபடம்: இயக்குநருக்கு கதை சொல்வதில் ஒரு கண்டம் !

IMG_1349முற்றிலும் புதியவர்கள் ஆதிக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.

குடி, குடிகாரர்களின் பின்னணியில் உருவான நகைச்சுவைக் கதை.

சின்னத்திரை புகழ் தீபக் நாயகன்., புதுமுகம் நேகா ரத்னாகர் நாயகி. இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவைப் பகுதிகளின் நாயகனாக வருகிறார். குமரவேல், செண்ட்ராயன், மனோபாலா மோசஸ், பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, கானாபாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஊடக சந்திப்பு இன்று மாலை நடந்தது.

விவிஆர் சினிமாஸ்க் சார்பில். தயாரிக்கும் தயாரிப்பாளர் வெங்கட்ராஜ் பேசும்போது ”இது நண்பனுக்காக உருவாகியுள்ள படம். ஆனால் படம் தொடங்கிய பிறகு எல்லாரும் நண்பர்களாகி விட்டார்கள்.

இந்தக் கதையை இயக்குநர் சொன்ன போது 20 பேர் கதை கேட்டோம். எல்லாருமே விழுந்து விழுந்து சிரித்தோம். அடுத்தடுத்த காட்சி என்ன என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. நாங்கள் நினைத்தது வேறு அவர் கூறியது வேறு என்றிருந்த து . க்ளைமாக்ஸ் என்னவென்று யாராலும் கற்பனை செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட ஜாலியான காமெடி கதை இது “என்றார்.

‘இவனுக்கு தண்ணில கண்டம்’ பட இயக்குநருக்கு கதை சொல்வதில் ஒரு கண்டம் இருந்திருக்கிறது பாருங்கள்.அப்படி யென்றால்20 பேர் கதை கேட்டு ஓகே செய்தபடம் என்ற வகையில் இந்த மாபெரும் சோதனையில் வென்ற இயக்குநரைப் பாராட்டத்தான்  வேண்டும்.

நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ். என். சக்திவேல், ஒளிப்பதிவாளர் ஆர். வெங்கடேசன்,நாயகன்தீபக்,  நேகா , கலை இயக்குநர்மோகன மகேந்திரன், வசனகர்த்தா ஒய். கார்த்திக், நடன இயக்குநர் சாண்டி, பாடகர்  கானாபாலா ஆகியோரும் பேசினர்.