2016 -ஐ காதலுடன் நிறைவு பெற வைக்கும் ‘தரமணி’ பாடல்கள்!

jsk-solo.rsவருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும்  ‘தரமணி’  திரைப்படத்தின் பாடல்கள் மூலம்,  2016 ஆம் ஆண்டு காதலுடன் நிறைவு பெற இருக்கின்றது

ஒவ்வொரு ஆண்டின் இறுதி  நாட்களையும் மகிழ்ச்சி கலந்த அன்புடன் நிறைவு செய்தால் தான், உதயமாகின்ற  ஆண்டும் சிறப்பாக இருக்கும்….அப்படி ஒரு உணர்ச்சிகரமான இன்பத்தை வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ரசிகர்களுக்கு வழங்க இருக்கின்றது, யுவன்ஷங்கர் ராஜாவின் மனதை மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் ‘தரமணி’ படத்தின் பாடல்கள். இந்த தரமணி திரைப்படத்தை  ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் தயாரித்து இருக்கிறார் ஜே எஸ் கே சதீஷ் குமார்.

“தமிழ் ரசிகர்களைப் பொறுத்த வரை  டிசம்பர் மாதம் என்றாலே  அது இசையின் மாதம் தான்….ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடைபெறும் மார்கழி உற்சவம் இசை நிகழ்ச்சியே அதற்கு சிறந்த உதாரணம்….. எனவே தான் எங்கள் தரமணி படத்தின் பாடல்களை இந்த மாதத்தில் வெளியிட  நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்….. இதுவரை  யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த சிறந்த  பாடல்களுள்  மிக சிறந்த பாடல்களாக எங்களின் தரமணி இருக்கும்….பாடல்களை கேட்ட பின் ரசிகர்கள் இதனை உறுதி செய்வார்கள்…..புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடுபவர்கள், ஐ  டி ஊழியர்கள்…..அந்த வகையில், தரமணி பாடல்கள் அவர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கும்….ஆண் – பெண் உறவை மட்டுமின்றி,  ஐ டி ஊழியர்களின்   வாழ்க்கையையும் தரமணி திரைப்படம்   உள்ளடக்கி இருப்பதே அதற்கு காரணம். வழக்கம் போல ரசிகர்களின் கற்பனைகளை  கவர்ந்து இழுக்கும் யுவன்ஷங்கர் ராஜா – இயக்குநர் ராம் கூட்டணி, இந்த முறையும் அதனை முழுமையாக பூர்த்தி செய்யும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்  ஜே சதீஷ் குமார்.