24 மணி நேரத்தில் நடக்கும் க்ரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது. எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை. இன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள். படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.    இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர். இசை – ஷெரீப் (அருவி புகழ் வேதாந்த் பரத்வாஜ் இசையில் ஒரு மெல்லிசை பாடல் உருவாகி இருக்கிறது) ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன் படத்தொகுப்பு – சந்திர சேகரன் கலை – பாலா ஓம் பிரகாஷ் தயாரிப்பு – தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் இயக்கம் – அலெக்ஸ், இளமைதாஸ்    

24 மணி நேரத்தில் நடக்கும் க்ரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’ Read More

விருதுகள் எல்லாம் குப்பைகள்: ராஜேஷ்குமார் அதிரடி பேச்சு!

வாசகர்களின் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்ற விருதுகள் எல்லாம் குப்பைகள் என்று  ராஜேஷ் குமார் அதிரடியாகப் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு : தமிழில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வரும் ராஜேஷ் குமாரைப் பாராட்டி வாழ்த்த -வரும் ஞாயிறு மாலை …

விருதுகள் எல்லாம் குப்பைகள்: ராஜேஷ்குமார் அதிரடி பேச்சு! Read More