நவராத்திரியை கொண்டாடும் ‘இதயத்தை திருடாதே’

சிறப்பு எபிசோடுகளுடன் நவராத்திரியை கொண்டாடும் இதயத்தை திருடாதே; தனக்கே உரித்தான பாணியுடன் நகைச்சுவையை வாரி வழங்கி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ~ நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க 2020, அக்டோபர் 24 முதல் 28 வரை இரவு 8.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை பாருங்கள் ~  இதயத்தை திருடாதே என்ற பெயரில் குதூகலம் நிறைந்த நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை கலர்ஸ் தமிழ் அதன் பார்வையாளர்களுக்கு வழங்கவிருப்பதால் இந்த சிறப்பான கேளிக்கை நிகழ்வை கண்டுகளிக்க தயாராகுங்கள்.  அக்டோபர் 24 சனிக்கிழமை முதல் தொடங்கி அக்டோபர் 28 புதன்கிழமை வரை நடைபெறுகின்ற இந்தவார எபிசோடுகளில் மகிழ்வூட்டும் துடிப்பான கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.  பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கரின் சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சியும் இதில் உள்ளடங்கும்.  கலர்ஸ் தமிழின் இத்தகைய நிகழ்ச்சியில் முதன்முறையாக தோன்றுகின்ற பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர்  அவரது தனித்துவமான நகைச்சுவை உணர்வால் பார்வையாளர்களை பரவசப்படுத்துவது நிச்சயம்.  இவரது வரவால் நிகழ்ச்சியின் கொண்டாட்டங்கள் இன்னும் களைகட்டும் என்பதில் ஐயமில்லை.  தனது தனித்துவமான இந்நிகழ்ச்சி பற்றி பேசிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், “பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நான் தொடர்ந்து அங்கம்வகித்து வந்திருக்கிறேன்.  எனது திறமையை இந்த உலகம் கவனித்து கருத்தில்கொள்ளுமாறு செய்த செயல்தளம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான்.  எனினும், கலர்ஸ் தமிழின் ஒரு  புனைவு நிகழ்ச்சியில் இதுவே எனது முதல் அறிமுகமாகும்.  இதயத்தை திருடாதே நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இருப்பதில் உள்ளபடியே மற்றற்ற உற்சாகமும், மகிழ்ச்சியும் எனக்கிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் எனது பங்கானது பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் இந்நிகழ்ச்சிக்கு கலகலப்பை கொண்டு வருவதன் மூலம் புத்துணர்வூட்டும் திருப்பத்தை நான் வழங்குகிறேன்.  உண்மையிலேயே இது எனக்கு ஒரு குதூகலமான அனுபவமாக இருந்தது.  இந்நிகழ்ச்சிக்காக நடித்தபோது நான் மகிழ்ச்சியடைந்ததைப்போலவே எனது நடிப்பையும் பார்வையாளர்கள் அதே அளவிற்கு மகிழ்ந்து கொண்டாடுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.  ரோபோ சங்கரின் சிறப்பு தோற்றம் மட்டுமன்றி, பல்வேறு கொண்டாட்டங்களின் தொகுப்பையும் உள்ளடக்கியதாக இந்நிகழ்ச்சி இருக்கிறது.  மிகப்பெரிய குழு அமைப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பூஜை சடங்குகள், இந்த நவராத்திரி திருவிழாவின் முக்கிய அம்சங்களையும், வரலாற்று பின்னணியையும் நினைவுப்படுத்துவதாக இருக்கும்.  மட்டற்ற பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த எபிசோடு, ரோபோ சங்கருடன் இணைந்து பார்ப்பவர்களையும் எழுந்து நடனமாடச் செய்யும் தாண்டியா தாள நடன நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.  2020 அக்டோபர் 24 முதல் 28 ஆம் தேதி வரை  ஒவ்வொரு நாளும் இரவு 8.30 மணிக்கு கலர்ஸ் தமிழின் இதயத்தை திருடாதே நிகழ்ச்சியின்போது நவராத்தியின் கொண்டாட்டங்களை கண்டு மகிழ மறக்காதீர்கள். கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது.  சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553).

நவராத்திரியை கொண்டாடும் ‘இதயத்தை திருடாதே’ Read More

இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….!

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர் தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத்திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது …

இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….! Read More

அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு!

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் சக்திசிதம்பரம்  இயக்கியுள்ள படம் பேய்மாமா. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது. நேற்று  இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் …

அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு! Read More

‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா – ஏடிகே கூட்டணி!

வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ சில பாடல்களைக் கேட்போம். நமக்குள்ளும் சக்திகள் இருக்கிறது, அதை நமக்கே சில பாடல்கள் …

‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா – ஏடிகே கூட்டணி! Read More