ஜேசுதாசுக்குப் பாத பூஜை செய்த எஸ்.பி.பி!

 

spb1rdஎன்றென்றும் எஸ்.பி.பி : 50 ஆண்டுகள் அசத்தலான சாதனை!

வளிமண்டலத்தின் காற்றுவெளிகளில் ஆக்சிஜனை விட அதிகம் கலந்திருப்பது எஸ். பி. பி யின் பாடல்கள் என்றால் அது மிகையில்லை.இனம்,மொழி ,பிரதேச எல்லை கடந்து இசை ரசிகர் உலகத்துக் காதுகளின் காதலர் அவர்.
எஸ். பி. பி என்கிற எஸ். பி. பாலசுப்ரமணியம் திரைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி அவருக்குப் பாராட்டுவிழா இன்று சென்னையில் நடந்தது.  ஜேசுதாஸ் உள்ளிட்ட கலைஞர்களை பங்கேற்று வாழ்த்தினர்.பாராட்டுவிழாவைத் தன்  50 ஆண்டுகால நிறைவுக்கான நன்றி கூறும் விழாவாக்கிய எஸ். பி. பி , தன் மானசீக குருவான கே.ஜே.ஜேசுதாசுக்குப் பாத பூஜை செய்து வணங்கிக் குருதட்சணை வழங்கி மரியாதை செய்தார்.
event-still-45இனி எஸ். பி. பி பற்றி..!
எஸ். பி. பி  என்பதன் விரிவாக்கம் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம்  என்பதாகும். இவர் ஒருபுகழ்பெற்ற இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார்.  இவர் எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார் .
இவர்   எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், கொணடம்பேட்டை,யில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில்  (தற்போது ஆந்திரப் பிரதேசமாக உள்ளது) பிறந்தார் .
இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிகதை கூறும் கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் .இவர்களில் எஸ். பி. சைலஜா இவருக்கு இளைய தங்கை ஆவார் சைலஜாவும் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதிலிருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் கொடுப்பவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.
1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்ரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார். இவர் தமிழில் ‘ஹோட்டல் ரம்பா ‘திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் ௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து ‘அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு’  ௭ன்ற பாடலைத்தான் முதலில் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக ‘சாந்தி நிலையம் ‘படத்தில் வரும் ‘இயற்கையெனும் இளையகன்னி’ என்ற பாடலைப் பாடினார் . ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த ‘அடிமைப் பெண்’  திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது. இப்போது எது முதல் பாடல் எனத்தெரிகிறதா?
 event-still-18சாதனைகள்!
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி எஸ். பி. பி ,கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.  ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாகக் கர்நாடக இசையைப் பயின்றதில்லை என்றாலும் ‘சங்கராபரணம்’ என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காகத் தேசிய விருது பெற்றார்.
இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் மாநில விருதுகள்  பலமுறையும், ,ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றுள்ளார்.
இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவகத்தில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடிச் சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடிச் சாதனை செய்திருக்கிறார். இவையெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.
spb144ஆரம்ப கால வாழ்க்கை !
பாலசுப்ரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிகதை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசைக் கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனந்தபூரில் மாணவனாக சேர்ந்தார்.
டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது .ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.
1964 ஆம் ஆண்டு அமெச்சூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னையை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல் பரிசு பெற்றார்.
ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார்.இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (கிட்டார் பிறகு ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (கிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடகக் கச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடிக்கடி இசையமைப்பாளர்களைச் ச்சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டிப் பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய ‘நிலவே என்னிடம் நெருங்காதே ‘என்ற பாடலாகும்.ஆனால் பின்னாளில் எல்லாப் பாடகர் நிலவுகளையும்  நெருங்கி ‘பாடும் நிலா பாலு ‘ எனப்பெயர் பெற்றார்.
spb-blகுடும்ப வாழ்க்கை!
பாலசுப்பிரமணியம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி,மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண், சரண் சிறந்த பின்னணிப் பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து இருக்கிறார்.
திரையிசை வரலாறு !
எஸ் பி பிக்கு முதல் அரங்கேற்ற படம் எஸ். பி. கோதண்டபானி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமணா (15,டிசம்பர், 1966), இத்திரைப்படத்தில்’ ராவே காவ்ய சுமபாலா ஜவராலா ‘ பாடலைப் பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார். அந்த அரங்கேற்றப் பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னட மொழிப்பாடலை 1966இல் “நகரே அதே ஸ்வர்க” என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு ‘மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ’ பாடலைப் பாடினார்.
மலையாளத் திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் பிரேம் நசீர் நடித்த ‘கடல்பாலம் ‘என்ற திரைப்படத்தில் “இ கடலும் மறு கடலும்” பாடலை பாடி அறிமுகம்ஆனார்.
இவர் இந்தியத் திரையிசையில் செழுமையான உயரத்தை மிகக் கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார். இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடிய இவர் , பின்னாளில் கமல்,ரஜினி முதல் அஜீத், விஜய் வரை பின்னணி பாடியுள்ளார்.
அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார்.  தென்னிந்திய திரையிசையில் வெற்றிக் கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.அதன் பிறகு இவரது கொடி ஆகாய உயரத்தில் பறந்தது.
உலகளாவிய வெற்றி!
 
எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த ‘சங்கராபரணம்’ திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். ‘சங்கராபரணம் ‘ படம்தெலுங்குத் திரையுலகில் சிறந்த திரைப்படமாகத் திகழ்ந்தது. இத்திரைப்படம் இயக்குநர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ் பி பிக்கு பெரியப்பா மகன் ஆவார்.
இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசைத் திலகம் கே. வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டன. எஸ் பி பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து  ‘சங்கராபரணம்’ படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார். இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ‘ஏக் துஜே கே லியே’ (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம் ,இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.
எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
1983 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாகர சங்கமம்’ (தெலுங்கு திரைப்படம்) கிளாசிக்கல் இசையில் அமைத்ததனால் இளையராஜாவுக்கும் எஸ் பி பிக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது.
1988 ஆம் ஆண்டு ‘ருத்ரவீணா ‘(தெலுங்கு) திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.
1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ் பி பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடிவந்தார். அதிலும் ‘மைனே பியார் க்யா’ மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம். இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது ‘தில் தீவானா ‘பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கிக் கொடுத்தது.
இவர் அடுத்த தலைமுறைக்கும் காதல் ரசனையோடு சல்மான் கான் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சல்மான் கான் நடித்த ‘ஹம் ஆப்கே ஹே ஹான் ‘மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது .இப்படத்தில் லதா மங்கேஷ்கருடன் எஸ் பி பி பாடிய ‘திதி தேரா தேவர் தீவானா’ பாடல் மிகவும் பிரபலமானது இப்பாடலுக்காக லதா மங்கேஷ்கர் பிலிம்பேர் விருது சிறப்பு விருது பெற்றார். இவையெலாம் பாலசுப்பிரமணியம் ஒரு மிகப்பெரிய இந்தியப் பின்னணிப்பாடகர் என்பதை எடுத்துகாட்டுகிறது.
பின்னணிக்குரல், இசையமைப்பு, நடிப்பு!
எஸ் பி பி நடிகர் கமல்ஹாசனுக்கு 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.கமல் நடித்த தமிழ் திரைப்படம் ‘மன்மத லீலை ‘தெலுங்கில் ‘மனமத லீலா’ என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ். பி. பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்னாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் , நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். நடிகர் கமலஹாசனுக்கு சரியாகப்பொருந்துகிற பின்னணிக் குரல் கொடுப்பவராக திகழ்கிறார். கமல் நடித்த’ தசாவதாரம் ‘திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை ‘அன்னமயா’ மற்றும்’ ஸ்ரீ சாய் மகிமா’ திரைப்படங்களுக்குப் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த’ ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ (தமிழ்) படத்திற்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.
நடிகராக!
பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.
பெற்ற விருதுகள்!
 
இந்திய தேசிய விருதுகள்!
வருடம் திரைப்படம் -பாடல் -மொழி
1996  மின்சார க்கனவு  , (பாடல் : தங்கத்தாமரை  மகளே)தமிழ்
1995  சங்கீத சகர கனயோகி பஞ்சக்சற கவை (பாடல் : உமண்டு க்ஹுமண்டு கன கர் )கன்னடம்
1988 ருத்ரவீண (பாடல் : செப்பாழனி உண்டி )தெலுங்கு
1983 சாகர சங்கமம் (பாடல் :  வேதம் அனுவனுவுன )தெலுங்கு
1981 ஏக் துஜே கே லியே (பாடல் :  தேரே மேரே பீச் மேனி )இந்தி
1979 சங்கராபரணம் (பாடல் :  ஓம் கார நதானு )தெலுங்கு
இவ்வளவு சாதனைகளுக்குப்பின்னும்  எளிமை மாறாத குணத்துடனும் இளமைமாறாத குரலுடனும் எஸ்.பி.பி இன்றும் பாடி வருகிறார் . வாழும்  வரலாறாகியுள்ள பாடும் நிலா பாலுவை வாழ்த்துவோம்.

.