‘பேட்டரி’ படத்தில் செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி !

ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”. மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் மணிபாரதி கூறியதாவது… பொதுவாகவே நல்ல கதையம்சம் …

‘பேட்டரி’ படத்தில் செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி ! Read More

பல ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த ஒரு வெற்றி : பரத்!

சென்றவாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் காளிதாஸ். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி இருந்த இப்படத்தை DINA STUDIOS , INCREDIBLE PRODUCTION, LEAPING HORSE ENTERTAINMENT சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் …

பல ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த ஒரு வெற்றி : பரத்! Read More

“தர்பார்” படத்தின் ட்ரைலர் !

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்  “தர்பார்” படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார்  நயன்தாரா நடிக்கிறார் .பிரபல பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும் , முக்கிய  கதாபாத்திரங்களில் நிவேதா …

“தர்பார்” படத்தின் ட்ரைலர் ! Read More

திருவள்ளுவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்!

மாணவர்களுக்கான பிரச்சினைகள் குறித்து திரைப்படம் மூலம் பதிவு செய்ய இருக்கிறார்கள் பிளாக் ஷீப். தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள். …

திருவள்ளுவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்! Read More

’பற’ என்பது விடுதலையின் குறியீடு: இயக்குநர் கீரா விளக்கம்!

மனிதன் அதிகாரத்தை முன்னிறுத்தியும் தனது சாதி, மதம்ஆகியவற்றை முன்னிறுத்தியும் பிற மனிதனுக்கு அநீதி இழைத்ததினால் அதைக் கண்டு பொருமியும் பொங்கியும் எழுந்தது தான் சமூகநீதி என்ற கோசம். நம் தமிழ்சினிமாவில் சமூகநீதி பேசும் படங்கள் தற்போது அதிகமாக வரத்துவங்கியுள்ள நிலையில்  ஒடுக்குமுறைகளை …

’பற’ என்பது விடுதலையின் குறியீடு: இயக்குநர் கீரா விளக்கம்! Read More

நாளை“தர்பார்” படத்தின் ட்ரைலர் !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் “தர்பார்” படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு ! இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “தர்பார்” . 2.0 எனும் பிரமாண்ட படத்தின் வெற்றிக்கு …

நாளை“தர்பார்” படத்தின் ட்ரைலர் ! Read More

சென்னையில் டிசம்பர் 22-ல் முக்தா பிலிம்ஸின் வைர விழா!

பாபநாசம் அருகே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள்  முக்தா சகோதரர்கள். சிறு வயதில் தந்தை இழந்து  பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்தார்கள். பிறகு 1945 இல் முக்தா ராமசாமி Modern theatres ல் Typist ஆக வேலைக்கு சேர்ந்தார். “பர்மா ராணி”  தயாரிப்பின் கால கட்டத்தில் .. அதில் நடித்த கதாநாயகன் சொன்ன நேரத்தில் வராததால் அதை தயாரித்து இயக்கிய TR சுந்தரம்..,கோபத்தில் அவரை நீக்கி விட்டு அவரே கதா நாகனாகவும் நடித்தார். அந்த சமயத்தில் முக்தா ராமசாமியை தன் காரியதரிசியாக வேலை செய்ய சொல்லி தயாரிப்பு வேலையில் ஈடுபடுத்தினார். பின்பு 1947 கம்யுனிச கொள்கையில்  பிடிப்பு கொண்ட சீனிவாசனை. முக்தா ராமசாமியின் வேண்டுகோளுக்கு இனங்க  வேறு பாதை அமைத்து தன்னிடம்  உதவி இயக்குனராக பணிபுரிய வைத்தார்  TR Sundaram.. திரைப்பட தயாரிப்பாளர் ஆன பிறகும் TRS சொல்லும் வேலையை முதற் கடமையாக கருதி செய்து  முடிப்பார் முக்தா ராமசாமி.   முக்தா சினிவாசன் உதவி இயக்குனராகவும்  இணை  இயக்குனராகவும்  வேலை செய்து  ” முதலாளி ” என்கிற படத்தை இயக்கினார்.. முக்தா ராமசாமி  படங்களை விநியோகமும் செய்தார். முதலாளிக்கு பிறகு இயக்கிய படங்கள் சரியாக ஓடாத காரணத்தால்  வேலை இல்லாமல் இருந்த சினிவாசனுக்கு  அண்ணனோட சேரந்து சொந்த பட தயாரிப்பு நிறுவனம்  தொடங்க சொல்லி அறிவுறுத்தி உதவியும் செய்தார் திரையுலக பிதாமகர் இயக்குனர் K சுப்ரமணியம். Novembe 1959 இல் Meenakumari நடித்த ” Ardhangini” என்ற ஹிந்தி வெள்ளிவிழா படத்தை விலைக்கு வாங்கினர்கள்.1- 4 -1960 இல் அதை தமிழாக்கம் செய்து  “பனித்திரை” பெயரில்  படபிடிப்பை தொடங்கினார் கதாநாயகன் A Nageswararao,  கதாநாயகி  B சரோஜாதேவி.  தெலுங்கில்  A நாகேஸ்வராராவுக்கு பல படங்கள் வெற்றி  பெற்று  Top hero அந்தஸ்த்தை பெற்றார்.  அதனால் Advance  ஸோடு shooting செலவையும் சேரத்து வேறு  நடிகரை வைத்து எடுங்கள் என்று திருப்பி கொடுத்தார் படபிடிப்பு நின்றது  8 மாதங்கள்  கழித்து ஜெமினிகணேசன் நடிக்க ஒப்பு கொண்டார்  மீண்டும் படபிடிப்பு தொடங்கியது பல தடங்கள்களை  சந்தித்து 1961 ரிலீஸானது. படம் ஓரளவு ஒடினாலும்  கடனை அடைக்கத்தான் முடிந்தது  பிறகு ” இயத்தில் நீ “,  பூஜைக்கு வந்த மலர்” சுமாராக ஓடினாலும் தேன்மழை  92 நாட்கள் ஓடி பெரிய வெற்றியை  கண்டது. “நினைவில் நின்றவள” பொம்மலாட்டம்” வியாபார ரீதியில் வெற்றி அதன் பிறகு “நிறைகுடம்” சிவாஜிகணேசன் வைத்து முதல்படம் ,வியாபார ரீதியில் மிக  பெரிய வெற்றி அடைந்தது. தவபுதல்வன், சூரியகாந்தி, அந்தமான் காதலி, பொல்லாதவன், கீழ்வானம் சிவக்கும்,  சிவப்பு சூரியன், சிம்லா ஸ்பெஷல், பரிட்சைக்கு நேரமாச்சு,  நாயகன், கதாநாயகன்  வாய்கொழுப்பு  போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன. சிவகுமார் , லட்சுமி,  ஸ்ரீப்ரியா , நடிப்பில், சிவசங்கரி அவர்களின் கதையில், விசுவின் திரைக்கதை, வனத்தில் முக்தாசீனிவாசன் இயக்கத்தில் வெளியான   அவன் அவள் அது  25 வாரம் ஓடி விழாக்கள் கொண்டாடப்பட்டது. இந்த படங்கள் உட்பட 41 படங்களை தயாரித்துள்ளது முக்தா பிலிம்ஸ். வருகிற 2020 இல் ” ஶ்ரீ வேதாந்த தேசிகர் ” திரைக்கு வர இருக்கிறது. இந்த 60 ஆண்டு பயணத்தில் எங்களுக்கு  தோல் கொடுத்த நடிகர்கள், நடிகைகள் மற்றும தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு …நன்றி தெரிவிக்கும் வகையில் முக்தா பிலிம்ஸ் வைரவிழா என்ற பெயரில்  இம்மாதம் ( டிசம்பர் ) 22 ம் தேதி மாலை 5 மணியளவில் எம்.ஆர்.சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம், குமாரராஜா ஹாலில்  நடைபெற உள்ளது. விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். விழாவிற்கான அனைத்த ஏற்பாடுகளையும்  முக்தா ராமசாமி  குடும்பத்தினர் மற்றும் முக்தா  சீனிவாசன்  குடும்பத்தினர்  இணைந்து  செய்து வருகிறார்கள். 

சென்னையில் டிசம்பர் 22-ல் முக்தா பிலிம்ஸின் வைர விழா! Read More

‘தம்பி’கொண்டாடக்கூடிய படமாகவும், புது அனுபவமாகவும் இருக்கும்: நடிகர் கார்த்தி!

‘தம்பி’ படத்தில் நடித்ததைக் குறித்தும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நடிகர் கார்த்தி பகிர்ந்துக்கொண்டதாவது. இந்த படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அதன்பிறகு கதையை விரிவாக எழுதி கூறும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அக்கா, தம்பி கதை …

‘தம்பி’கொண்டாடக்கூடிய படமாகவும், புது அனுபவமாகவும் இருக்கும்: நடிகர் கார்த்தி! Read More

தினமும் பரிசு மழை, பார்வையாளர்களும் Voot app மூலம் பங்கேற்கும் வாய்ப்பு!

சென்னை, 14 டிசம்பர், 2019: டிசம்பர் 23 ம் தேதி இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி கேம் ஷோ நிகழ்ச்சி துவங்குகிறது. தங்களை பற்றி மட்டுமல்லாமல் எப்போதும் தங்களது அன்பிற்குரியவர்களை பற்றி கனவு காண்பவர்கள் பெண்கள். அவர்களின் கனவுகளுக்கு இறக்கை கட்டி அவர்களை பறக்க செய்யும் நோக்கமாக, உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு கேம் ஷோவை பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும், ஸ்டூடியோ நெக்ஸ்ட் நிறுவனமும் அர்ப்பணிப்பதில் பெருமை கொள்கிறது. எப்போதும் திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ராதிகா சரத்குமார், கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்தும், ஒருங்கிணைத்தும் வழங்குகிறார். நிப்பான் பெயிண்ட்ஸ், அருண் எக்ஸ்செல்லோ, கோடக் மகேந்திரா வங்கி மற்றும் தமிழ் மேட்ரீமோனி ஆப் ஆகியவை இந்த நிகழ்ச்சியின் விளம்பர பார்ட்னர்களாக தங்களை இணைத்து கொண்டுள்ளன. டிசம்பர் 23 ம் தேதி இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. மண்டல பொழுதுபோக்கு பரிவான Viacom18 பிளாட்பார்ம் ஆன VOOT ஆப் மூலமும் கோடீஸ்வரி நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம். இதுதொடர்பாக மண்டல பொழுதுபோக்கு பிரிவான Viacom18 தலைவர் ரவீஸ் குமார் கூறும்போது, திரைப்படம், கலை, தொலைக்காட்சி போன்றவற்றிற்கான புரட்சிகரமான கருத்தாக்கங்களை உள்ளடக்கியது தமிழ் சந்தையாகும். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி துவக்கப்பட்டதில் இருந்தே புதுமையானவற்றை நாங்கள் சொல்லும் விதத்தில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறோம். ‘யாருக்கு கோடீஸ்வரராக விருப்பம்?’ என்ற உலகின் மிகவும் வெற்றிகரமான முதல் நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பெண்களுக்காக பிரத்யேக நிகழ்ச்சியாக ஒளிபரப்புகிறது. ஏனென்றால், தனக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் வாழும் பெண்களுக்காகவே இந்த நிகழ்ச்சியை வழங்குகிறோம் என்றார். ஒரு பயன்மிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கலர்ஸ் தொலைக்காட்சியின் வர்த்தக தலைவர் அனுப் சந்திரசேகரன் கூறும்போது, பெண்களானவர்கள் அறிவாளிகள், விழிப்புணர்வு கொண்டவர்கள், ஸ்மார்ட்டானவர்கள் என்பதை உணர்த்தும் விதமாக அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு நிகழ்ச்சியை பரிட்சார்த்த முறையில் நடத்துவது எங்களுக்கு மிகந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக அதிக அளவிலான தமிழ் பேசும் பெண்கள் நாடு முழுவதும் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை கதைகள் அவர்கள் சொந்த அனுபவத்துடன் கூடிய வீரதீரமிக்கதாக உள்ளது. விளையாட்டை நடத்தும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையிலும், எங்களின் முயற்சியானது பெண்கள் சவால்களை எதிர்கொண்டு வெற்றியை கைப்பற்றுவதே நோக்கமாகும். புரவலர், நண்பர், வழிகாட்டியாக செயல்படும், மிக பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகையான ராதிகா சரத்குமாருடன் நாங்கள் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார். பார்வையாளர்கள் மத்தியில் மிக பிரபலமடைந்துள்ள இந்த நிகழ்ச்சியை நடத்தும் மற்றும் தொகுத்து வழங்கும் ராதிகா சரத்குமார், போட்டியாளர்களிடம் 15 கேள்விகளை கேட்பார். அந்த கேள்விகளுக்கு ரூ.1000 த்திலிருந்து ரூ.1 கோடி வரை பரிசாக கிடைக்கும். போட்டியாளர் அனைத்து 15 கேள்விகளுக்கும் வெற்றிகரமாக சரியான பதிலை அளித்துவிட்டால் அவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். விளையாடிக்கொண்டிருக்கும்போது போட்டியாளர்கள் 50:50, ஆடியன்ஸ் போல் (பார்வையாளர்களை உதவிக்கு அழைத்தல்), ஆஸ்க் தி எக்ஸ்பெர்ட்( நிபுணர்களிடம் கேட்டு பதில் அளித்தல்), பிளிப் (சில பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுத்தல்) ஆகிய 4 விதமான ஹெல்ப் லைன் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் ராதிகா சரத்குமார் பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். இந்த நிகழ்ச்சி குறித்து அவர் கூறும்போது, ஒரு சாதாரண பெண்ணை கோடீஸ்வரி ஆக்குவது என்ற எண்ணமே மகிழ்ச்சியை அளிக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் அறிமுகமானபோது எனது இதயத்திலும் கூட கனவுகளும், சிறிய ஆசைகளும் இருந்தன. எனது வேலையை சரிவர நிறைவேற்றியபோது ஆண்டுகள் செல்ல செல்ல அவை வளர்ந்து கொண்டே இருந்தன. என்னிடம் இருந்த அதே நோக்கத்தையே இந்த போட்டியில் பங்கேற்பவர்களிடமும் பார்க்கிறேன் என்றார். கோடீஸ்வரி நிகழ்ச்சியை தயாரிப்பது ஸ்டூடியோ நெக்ஸ்ட் ஆகும். இது சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவாகும். இந்த நிகழ்ச்சி தொடர்பான இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கான லைசன்சை இந்த நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. சுமார் 9 மொழிகளில் 1,800 அதிகமான எபிசோட்களை தயாரித்து ஒளிபரப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்பான ஸ்டூடியோ நெக்ஸ்ட் தலைவர் இந்திராணி சக்கரபர்த்தி கூறும்போது, இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டூடியோ நெக்ஸ்ட் தலைவர் இந்திராணி சக்கரவர்த்தி கூறும்போது, இந்த ஆண்டு பல்வேறு மொழிகளில் இந்த முத்தாய்ப்பான நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முழுபொறுப்பும் ஸ்டூடியோ நெக்ஸ்ட் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, 2019 ம் ஆண்டு துவக்கப்பட்ட 6 நிகழ்ச்சியில் தமிழும் ஒன்று. இந்த கேம் ஷோ பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிலையில், கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் முதல் முறையாக அனைத்து போட்டியாளர்களும் பெண்களாக பங்கேற்கிறார்கள். போட்டியாளராக முன் இருக்கையில் அமரும் மிக சிறந்த வாய்ப்பை இந்த சீசன் அனைத்து பெண்களுக்கும் வழங்குகிறது என்றார். வூட்(VOOT) ஆப் மூலம் பார்வையாளர்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோடீஸ்…

தினமும் பரிசு மழை, பார்வையாளர்களும் Voot app மூலம் பங்கேற்கும் வாய்ப்பு! Read More

21 வது ஆசிய முதுநிலை தடகள வெற்றியாளர்கள் சந்திப்பு !

21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம் 21 வது ஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் மலேசியாவின் குச்சிங்கில் 2 டிசம்பர் முதல் 7 டிசம்பர், 2019 வரை நடத்தப்பட்டது. எக்மோர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில், …

21 வது ஆசிய முதுநிலை தடகள வெற்றியாளர்கள் சந்திப்பு ! Read More