
இன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவனின் ராஜாஜி வித்யாஷ்ரம் கலையரங்கத்தில் விழா நடைபெற்றது. ஆதரவற்ற இயலாத குழந்தைகள் 1008 பேரை அழைத்து வந்து அவர்களுக்காக ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தினர். கட்டணம் ஏதுமின்றி அவர்களை மகிழ்ச்சியூட்ட மட்டுமே இது நடத்தப்பட்டது. இதில் பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் பிரதானமாக கலந்துகொண்டு பாடி குழந்தைகளுக்கு நேரடி இசைநிகழ்ச்சி அனுபவத்தை வழங்கினார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் சக்தி அண்ட் சாய் இசைக்குழுவினர் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இசையமைப்பாளர் தமன் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் இசைக் கச்சேரியில் பாடி மகிழ்வித்தார். பல்வேறு பாடல்கள் பாடிய போது அந்தக் குழந்தைகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.குழந்தைகள் பலரும் மன எழுச்சியுடன் ஆடி மகிழ்ந்தனர். இந்த இசை நிகழ்ச்சி அக்குழந்தைகளின் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமையும்படி உணர்வுபூர்வமாக இருந்தது. நிகழ்ச்சியில் நடிகைகள் சோனா,அர்ச்சனா,இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.‘
.
நிறைவாக அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது .
ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ’வின் தலைவர் விஜய் கோத்தாரி விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார்.நிகழ்ச்சியை கண்டு. களித்த பலருக்கும் தோன்றியது, இதுதான் ‘சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களைச் சந்தோஷப் படுத்துவதுதான்’.
இசையமைப்பாளர் தமன் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் இசைக் கச்சேரியில் பாடி மகிழ்வித்தார். பல்வேறு பாடல்கள் பாடிய போது அந்தக் குழந்தைகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.குழந்தைகள் பலரும் மன எழுச்சியுடன் ஆடி மகிழ்ந்தனர். இந்த இசை நிகழ்ச்சி அக்குழந்தைகளின் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமையும்படி உணர்வுபூர்வமாக இருந்தது. நிகழ்ச்சியில் நடிகைகள் சோனா,அர்ச்சனா,இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.‘
.
நிறைவாக அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது .
ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ’வின் தலைவர் விஜய் கோத்தாரி விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தார்.நிகழ்ச்சியை கண்டு. களித்த பலருக்கும் தோன்றியது, இதுதான் ‘சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களைச் சந்தோஷப் படுத்துவதுதான்’.