ரங்கராஜ் ,ஸ்ருதி நாராயணன், நான்சி, டெல்லி கணேஷ், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீலேகா ,அறந்தாங்கி நிஷா நடித்துள்ளனர்.எழுதி இயக்கியுள்ளார் ரங்கராஜ்.
ஒளிப்பதிவு மனோஜ்,இசை ஜோஸ் பிராங்க்ளின், படத்தொகுப்பு ரஞ்சித், சண்டைக்காட்சிகள் ஆக்சன் பிரகாஷ்.ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்துள்ளார். விக்கி பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
ரங்கா என்று அழைக்கப்படும் நாயகன் ரங்கராஜ்,சிறு வயதில் தாய், தந்தையை வன்முறையால் இழக்கிறார்.பெற்றோரை இழந்தாலும் நாயகன் படித்து போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார்.அன்பான அழகான மனைவி பாசமான பெண் குழந்தை என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவர் ஒரு அநியாயத்துக்குத் துணை போகாததால் அந்த நாசகார கூட்டம் அவரது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்கிறது .மனைவியின் கொடூர மரணத்திற்குப் பிறகு வெறுப்புக்கும் விரக்திக்கும் ஆளாகிறார் ரங்கராஜ்.தன் மீதே வெறுப்புடன் வாழ்ந்து வருகிற நாயகன் ரங்கராஜுக்குத் தன் மனைவியை யார் கொலை செய்தார்கள் என்று ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது. அதற்குப்பிறகு அவர் என்ன செய்தார்? அவரது மனைவி எதற்காகக் கொலை செய்யப்பட்டார்? கொலை செய்தவர்கள் யார்? போன்ற வினாக்களுக்கான விடையை 131.29 நிமிடங்கள் கொண்ட படமாகச் சொல்வது தான் ‘கட்ஸ்’.
நாயகன் ரங்கராஜ் தனது முதல் படத்திலேயே விவசாயி பெத்தனசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் என அப்பா மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் காதல், பாசம், ஆக்ஷன் என அனைத்து மைதானத்திலும் புகுந்து விளையாடி உள்ளார்.
காதலி மனைவியாகும் போது காதல் பொங்கி வழியும் காட்சிகளிலும் அதே மனைவி கொலையாகும்போது ஆவேசமாகத் தெறிக்கும் காட்சிகளிலும் நிறைய பாடுபட்டுள்ளார்.
அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஸ்ருதி நாராயணன் வருகிறார்.கிராமத்து பெண்ணாக அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நான்ஸியின் நடிப்பிலும் குறையில்லை.
நாயகன் ரங்கராஜ் இதில் விவசாயி பெத்தனசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் என அப்பா மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில்,அதுவும் தனது முதல் படத்திலேயே நடித்துள்ளார். இந்த படத்தில் காதல், பாசம், ஆக்ஷன் என அனைத்து மைதானத்திலும் புகுந்து விளையாடி உள்ளார்.
காதலி மனைவியாகும் போது காதல் பொங்கி வழியும் காட்சிகளிலும் அதே மனைவி கொலையாகும்போது ஆவேசமாகத் தெறிக்கும் காட்சிகளிலும் நிறைய பாடுபட்டுள்ளார்.
அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஸ்ருதி நாராயணன் வருகிறார்.கிராமத்து பெண்ணாக கிராமத்துப் பெண்மணியாக அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நான்ஸியின் நடிப்பிலும் குறையில்லை. இருவருமே தோற்றப்பொலிவு கொண்ட நடிகைகளாகத் திரைத்தோற்றத்தில் திருப்தி தருகிறார்கள்.
அந்தக் காவல் நிலையத்தில் மூத்த காவலராக வரும் டெல்லி கணேஷின் உடல் மொழியில் தெரிவது முதிர்ந்த நடிப்புமட்டுமல்ல, அவரது முதுமையான உடல் நிலையும் தான்.
இதுவரை வெறுப்பூட்டும் வில்லன் வேடத்தில் நடித்து வந்த சாய் தீனா இதில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க இன்றுள்ள அவர் இப்படத்தில் ரங்கராஜின் மாமாவாக வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிர்லா போஸ், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீலேகா, பெண் காவலராக நடித்திருக்கும் அறந்தாங்கி நிஷா என மற்ற துணைப் பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அளவாக நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் கதைக்கும் தயாரிப்பாளர் பட்ஜெட்டுக்கும் ஏற்ற மாதிரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப ஒலித்துள்ளது.
தந்தை மகன் சார்ந்த வாழ்க்கை, சமுதாய சீர்கெட்டால் அவர்கள் எதிர் கொள்ளும் தொல்லைகள், பகைகள் என்று இரண்டு வேறு கதைகள் இருந்தாலும்,சரியாகத் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ரஞ்சித்.திரைக்கதையில் இன்னும் நகாசு வேலை செய்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்.
நாயகனாக நடித்திருக்கும் ரங்கராஜ், கதை எழுதி இயக்கியும் உள்ளார்.கதை என்னவோ போலீஸ், சமூக விரோதிகள் என்று பல படங்களில் பார்த்த ஒன்றாக இருந்தாலும் முடிந்தவரை படத்தை விறுவிறுப்பாக காட்ட முயன்றுள்ளார்.
இயக்குநர், நாயகன் என்று இரு வேறு பாத்திரங்களில் நடித்திருக்கும் ரங்கராஜ் தன்னை நிரூபிப்பதற்காகவே பல காட்சிகளை அமைத்துள்ளார்.நடிகராகத் தன்னை நிரூபிப்பதற்காக அவர் காட்டிய உழைப்பை திரைக்கதையிலும் காட்டியிருந்தால் படம் மேலும் நன்றாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில், ‘கட்ஸ்’ குறைகளை கட் செய்துவிட்டுப் பார்த்தால் கவரும்.